Sunday 30 April 2023

சமத்துவ சமுதாயம் படைக்க

                                 சமத்துவ சமுதாயம் படைக்க



நாட்டில் உள்ள செல்வந்தர் எல்லாம்

நன்றி செலுத்துகிறான் கடவுளுக்கு...

அவன் அப்படி

செல்வந்தனாய் இருக்கக் கடவுள்

காரணமென அவன் நினைக்கிறான்...

அவன் கும்பிடுகிறான்..


அடுத்த வேளை உணவுக்கு

அல்லாடும் உனக்கு எதற்கு

கடவுள் நம்பிக்கையும்...

கடவுளுக்கு நன்றி சொல்லலும்

என்று கேட்டார் பெரியார்...


நியாயமாக உழைத்து ஓடாய்த்

தேயும் மாந்தருக்கு எல்லாம்

கடவுள் மேல் கோபம் வரவேண்டும்..

அப்படி ஒருவன் இருப்பதாக எண்ணினால்

அவனை வசைபாடிக் குவிக்க வேண்டும்..

எத்தனை வேறுபாடுகள் 

உழைக்கும் எங்களுக்கு உள்ளே..

எல்லாம் வந்தது உன்னாலே

எனும் ஆத்திரம் வரவேண்டும் அவன்மேலே...


கடவுள் என்னும் கட்டு

எப்படித் தொழிலாளர்களைக்

கட்டிப்போட்டு இருக்கிறது

என்பதனை இந்தியாவில்

கண்டுபிடித்தவர்கள் அண்ணலும் அய்யாவும்..


ஆதலால்தானோ புரட்சிக்கவிஞர்

'கடவுள் என்னும் கட்டறுக்க

தொழிலாளரை ஏவுவோம்' என்றார்


உழைக்கும் தொழிலாளி 

ஓராயிரம் ஜாதிகளாய்ப்

பிரிந்து கிடக்கிறான் இங்கே...

புரட்சி வரல் இந்த நாட்டில்

சாத்தியமில்லை என்றார் அண்ணல்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே...


இன்றைய நவீன அறிவியலும்

மிகத்தெளிவாகச்சொல்கிறது..

மரபணுக்களின் வழியே

ஆய்ந்து அறிந்து சொல்கிறது..

எல்லா ஜாதிகளும் கலப்புகள்தான்

தூய ஜாதி என எதுவுமில்லை என்று...


மே நாளில் உறுதியேற்போம்..

உழைக்கும் தோழர்களைப் பிரிக்கும்

ஜாதியை சவக்குழிக்கு அனுப்புவோம்..

சமத்துவ சமுதாயம் படைக்க

உழைக்கும் அணியில் நாமும் 

இணைந்து உழைப்போம்...

'மே தினம் வாழ்க!வாழ்க!

உழைப்போர் வாழ்க! வாழ்க!


                              வா.நேரு,

                              01.05.2023


2 comments:

Anonymous said...

உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கும் ஜாதியையும் அதைக் கட்டமைத்த கடவுளையும் கட்டறுப்போம். மே தினம் வாழ்க! 🙏

Anonymous said...

நன்றி...வாசிப்பிற்கும் கருத்திற்கும்