Saturday 28 April 2012

கணினியை இனிமேலும் கற்றுக்கொள்ள முடியுமா?


செயங்கொண்டத்தில் பெரியார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில்(8.4.2012)  தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும்போது இந்தப் பள்ளியில் ஜாதி, மதம், அரசியல் கிடையாது. மனிதநேய கண்ணோட்டம் மட்டும்தான். கல்வி என்பது சமுதாய மாற்றத்திற்கு பயன்பட வேண்டும். இந்தப் பள்ளிக்கு மேலும், ஒரு கோடி ரூபாயில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே வந்திருக்கின்ற பெற்றோர்கள் மாணவர்களிடம் நேரத்தைச் செலவிட வேண்டும். ஆசிரியரே பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடக் கூடாது. இனி வரும் காலங்களில் கணினி பயிலாத வர்கள் கற்காதவர்கள் ஆவார்கள் என்ற நிலை வரும். ஆகவே, பெற்றோர்கள் வயதாகி இருந்தாலும் கணினி கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கணினி கற்றுக்கொள்வதற்காக பள்ளி வளாகத் திலேயே குறைந்த கட்டணத்தில் மாலை நேர கணினி வகுப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து தரப்படும். அதுதான் இந்த ஆண்டின் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள்.

கணினியை பெற்றோர் கற்றுக் கொள்வதா, அதுவும் கிராமப்புரத்து பெற்றோர் கற்றுக் கொள்ளமுடியுமா என்னும் கேள்வி எழுகிறது. கணினி கற்க என்ன படித்திருக்க வேண்டும்?  நம்மில் பல பேருக்கு கணினி கற்பதென்றால் நிறையப் படித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. 2, 3 ஆம் வகுப்பு படிக்கும் தன் மகன் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதையும், டைப் செய்வதையும் பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் கூட கணினி முன் அமர்ந்து கற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
பெரியார் இயக்கத்தை பொறுத்தவரை கல்வி என்பதாக இருந்தாலும் சரி, வாழ்க்கை என்பதாக இருந்தாலும் சரி  அது மற்றவர்களுக்கு, சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படவேண்டும் என்பதுதான் அடிப்படைக் கொள்கை. அவ்வகையில் பெற்றோர்கள் கணினி  கற்றுக் கொள்வது அவர்களுக்கும், அவர் களது குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் பயன்படும் என்னும் நோக்கில் கணினியை கற்றுக்கொள்ளலாம். கணினி கற்றுக் கொள்ள தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும், அத்தோடு ஆங்கில எழுத்துகளைப் பற்றிய அறிமுகமும், எந்தத் தமிழ் எழுத்துக்கு  எந்த ஆங்கில எழுத்தை டைப் செய்ய வேண்டும் எனும் அறிமுகமும் இருந்தால் போதும். கொட்டிக் கிடக்கும் தகவல்கள்
இணைய தளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நூலகத்திற்கு சென்று, நூல்களை தேடிக் கண்டுபிடித்து அவற்றில் நமக்கு வேண்டிய தகவல்களை குறிப்பதெல்லாம் அந்தக் காலம்.
கூகிள் சர்வரிலோ அல்லது மற்ற தேடு தளங்களிலோ சென்று நமக்கு வேண்டி யதைப் பெறுவது இந்தக்காலம். நேர விரயம் குறைவு, பல்வேறு நூல்களில் உள்ள தகவலகளை ஒரே நேரத்தில் பெறக்கூடிய வசதி. அதனைப் போலவே இணைய தளத்தில் உள்ள பேஸ் புக் போன்ற குழுமங்களின் மூலமாக, வெகு காலமாக நாம் சந்திக்க இயலாத நமது ஊர்க்காரர்களை, நமது பழைய கல்லூரி நண்பர்களை, பள்ளி நண்பர்களையெல் லாம் அடையாளம் கண்டு அவர்களோடு மீண்டும் நட்பினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
நமது ஒத்த கருத்தோட்டமுடையவர் களின் கருத்துகளை தெரிந்து கொள்ள லாம். நமது பரம்பரை எதிரிகள் எப்படிப்பட்ட கருத்துகளோடு இருக்கிறார்கள், அவர் களின் எண்ணம் என்ன? வெளியே சொல் லும் செய்திகள் என்ன போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளலாம். பல்வேறு பத்திரிகைகளைப் படித்துக் கொள்ளலாம். இணையமும் இடையூறுகளும்   நமது குழந்தை வேற்று நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமா?  ஆங்கிலத்தில் இன்னும் புலமை பெற வேண்டுமா? தமிழ் இலக்கணத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமா? மேடையிலே பேசுவது எப்படி என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? போட்டித் தேர்வுகளில் வினாக்கள் எப்படி வரும் என்று அறிந்து கொள்ள வேண்டுமா?  போட்டித் தேர்வுகளுக்கு எப்படி தயாரிக்க வேண்டும் என்பதனை ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமா? அத்தனைக்கும் வலைத் தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தை சரியாகப் பயன்படுத்த தெரிந்த ஒரு மாணவரால் பல வகையிலும் முன்னேற முடியும். இவையெல்லாம் நேர் மறையான செய்திகள். எதிர்மறையான செய்திகளும் இணையத்துக்குள் இருக் கின்றன. இணையத்தைப் பயன்படுத்து பவர்களில் மூவரில் ஒருவர் ஆபாச படம் பார்க்க அதனைப் பயன்படுத்துகின் றார்கள் என்று புள்ளி விவரங்கள்  சொல்கின்றன. 10, 12 வயது சிறுவனிடம் மிக வேகமாக செல்லும் இரு சக்கர வண்டியைக் கொடுத்து, அதிக டிராபிக் உள்ள சாலையில் அனுப்புவது போன்றது, எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாணவர்களை, மாணவிகளை இணைய தளத்தினை பயன்படுத்த சொல்வது  விபத்தில்  எந்த நேரத்திலும் நமது பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடலாம் என்பது போன்றதே, இணைய தளப் போதையால் நமது குழந்தையின் எதிர்கால வாழ்வும், நிகழ்கால அமைதியும் தொலைய நேரிடலாம்.
அதனால் பெற்றோரின் நிம்மதி முற்றிலுமாக தொலைந்து போகலாம். தமது குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர்களும் கொஞ்சம் கணினி கற்றுக் கொள்ளலாம். கண்காணிப்பு அவசியம் மாணவ, மாணவிகளுக்கு பெற் றோர்கள் மிகுந்த செலவு செய்து, புதிய மாடல் கண்னிகளை வாங்கிக் கொடுக் கின்றார்கள். அதனை வீட்டின் ஏதேனும் ஒரு மூலையில், இருட்டறைக்குள் வைத்து விடுகின்றார்கள். குடும்பத்தில் எல்லோ ரும் வந்து புழங்கும் இடமாக இருக்கக் கூடிய இடத்திலேயே கணினியை வைக்க வேண்டும் என்பது என் கருத்தாகும். மடிக்கணினியாக (லேப் டாப்) இருந்தால் கூட அதனை பெற்றோர்கள் பயன் படுத்தத் தெரிய வேண்டும்.

என்ன வலைத் தளங்கள் பார்க்கப் பட்டிருக்கின்றன, எவ்வளவு நேரம் இணைய தளத்தினைப் பயன்படுத்தியி ருக்கின்றார்கள், பேஸ் புக் போன்ற குழுக்களில் யார் யாரெல்லாம் நமது குழந் தைகளோடு தொடர்பில் இருக்கின் றார்கள், எப்படிப்பட்ட மன நிலை உள்ள கணினி விளையாட்டுகளை (கேம்ஸ்)  விளையாடுகிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.  விபரம் தெரியாத வயதில், வெளுத்த தெல்லாம் பால் என்று குழந்தைகள் நினைத்துக்கொண்டிருப் பார்கள்,  பெற்றோர்கள்தான் இதனைக் கண்காணிக்க வேண்டும். கணினியையும், குழந்தையையும் கட்டுப்படுத்தலாம்
பெற்றோர்கள் கணினி கற்றுக் கொள்வதன்மூலம், தன்னுடைய குழந்தை கணினியில் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக்கூடாது, எவ்வளவு நேரம் பார்க்கலாம், கேம்ஸ் எவ்வளவு நேரம் விளையாடலாம் போன்ற பல்வேறு விசயங்களை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர்கள் கட்டுப்படுத்த (ஞயசநவேயட ஊடிவேசடிடள) என்ற ஒரு வசதியே கணினியில் இருக்கிறது. கணினியில் ளவயசவ-ழூஉடிவேசடிட யீயநேட-ழூ ரளநச யஉஉடிரவேள என்ற பகுதிக்குள் உள்ளே சென்றால்,     என்ற வசதி இருக் கிறது. இந்த வசதியை ஓ.கே. கொடுப் பதன் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை இணைய தளத்திற்கு கொடுக்க முடியும்.
இணைய தளத்தில் தேடு தளத்தில் ஓர் எழுத்தினை வைத்து தேடச் சொல்லும்போது பல்வேறு விதமான வலைத்தளங்களும் வருகின்றன. ஆபாசப் படங்களோடு கூடிய வலைத் தளங்களும் வருகின்றன. பல பெற்றோருக்கு இதனை எப்படி தவிர்ப்பது என்பது தெரியவில்லை.
இந்த ளநவரயீ யீயசநவேயட உடிவேசடிடள-ல் சிறுவர்கள் பார்க்கக்கூடிய வலைத் தளங்களை மட்டும் அனுமதிக்கவும் என்று கொடுப்பதன் மூலம் தேவையற்ற குப்பை களை நமது கணினிக்குள் வருவதை தவிர்க்கலாம்.  எவ்வளவு நேரம் குழந் தைகள் கணினியைப் பயன்படுத்தலாம் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தை கொடுத்து பயன்படுத்தச் சொல்லலாம், அந்த குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானகவே கணினி வேலை செய்வதை நிறுத்திவிடும். இதனைப் போன்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. எந்த வயதில் கற்றுக் கொள்வது?
தமிழர் தலைவர் அவர்கள் கூறும் போது, பெற்றோர்கள் வயதாகி இருந் தாலும், கணினி கற்றுக் கொள்ள முடியும் என்று கூறியிருக்கின்றார். வயதுக்கும், கணினி கற்றுக் கொள்வதற்கும் தொடர் பில்லை. ஆர்வமும், வாய்ப்பும் இருந்தால்  எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும். எனக்குத் தெரிந்த ஒருவர், மிகப் பெரிய பொறுப்பினை அரசாங்கத்தில் வகித்தவர். மிகச் சிறந்த  பேச்சாளர், எழுத்தாளர், எத்தனையோ நல்ல விசயங் களை எனக்கு கற்பித்தவர். 65-க்கு மேற்பட்ட வயதில் கணினி கற்றுக் கொள்ள விரும்பினார். பெரிய வாய்ப்பாக எண்ணி கணினி பயன்பாட்டின் வழிமுறைகளைக் கூறினேன். ஒரு பத்தாவது படிக்கும் மாணவனைப்போல குறிப்புகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக செய்முறை பயிற்சி செய்து கற்றுக் கொண்டார். இரண்டு நாளில் ஒரு மாணவர் 2 மாதத்தில் படிக்கும் கணினி விசயங் களைக் கற்றுக்கொண்டார், இப்பொழுது அவராகவே மின் அஞ்சல் அனுப்புகிறார், மின் அஞ்சல் பெற்று வாசிக்கிறார். தேவை யான விசயங்களை கூகிள் போன்றவற்றில் தேடி எடுக்கின்றார், தமிழில் செய்தி அனுப்புகின்றார், ஆங்கிலத்தில் அனுப்பு கின்றார், தனக்கு விருப்பமான வலைத் தளங்களில் உலவுகின்றார், சும்மா கணினியில் புகுந்து விளையாடுகின்றார்.
முப்பதுகளில் இருக்கும் எனக்குத் தெரிந்த மற்றொருவர், அலுவலகத்தில் கணினியைப் பயன்படுத்தி வேலை பார்க்க வேண்டும், தனக்கு வேண்டிய அளவுகூட கணினியைக் கற்றுக் கொள்ள விருப்ப மில்லை, ஏதேனும் எழுத்து வேலை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு, கணினியைப் பார்த்துப் பயந்து  காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். விருப்பம் இருப்பின், எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும். சமூக நலன் கருதி கற்றுக் கொள்ளுங்கள்  கிராமப் புற பகுதியில் இருக்கும் பெற்றோர்கள் கணினி கற்றுக் கொள் வதன் மூலம், இணையத்தைப் பயன்படுத்தி மின் அஞ்சல் போன்றவற்றை அனுப்பத் தெரிவதன் மூலம் தங்களது குறை பாடுகளை எளிதாக அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவர் களுக்கு அனுப்ப முடியும். தங்களது தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., போன்றவர் களைத் தொடர்பு கொள்ள முடியும். கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளை, சமூக அமைதிக்கு எதிரான செயல்பாடு களை விடுதலை ( viduthalaimalar@gmail.com) போன்ற செய்தித் தாள்களுக்கு அனுப்ப முடியும்.
இலக்கிய நாட்டம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கலாம், படி எடுக்கலாம். தங்களது குழந்தைகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் மட்டுமல்லாது, மற்ற கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்பு களையும் அறிந்து அவர்களுக்கு எடுத்து சொல்லலாம். ... இன்னும் பல வகையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் ஊருக்கும், சமூகத்திற்கும்  பலன் கொடுக்கும் படிப்பு கணினி படிப்பு  எனவே பெற்றோர்களே, வாருங்கள், கணினி கற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி - விடுதலை 27.4.12 @28.4.12

No comments: