Saturday 2 February 2013

ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (3)

                                 ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (3)   
     
                    இனி ராக்கெட்டையும் விண்கலத் தையும் பார்ப்போம். ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையத் தாண்ட வேண்டுமானால் ஒரு வினாடிக்கு குறைந்தது 11.2 கிலோமீட்டர் அல்லது எட்டு மைல் வேகத்தில் அந்த ராக்கெட் போக வேண்டும். அப்போதுதான் பூமியின் ஈர்ப்பு விசையை (நுளஉயயீந எநடடிஉவைல)  மீறமுடியும். துல்லியமான கம்ப் யூட்டர் கணக்குகளில் ஒரு இம்மி பிசகானாலும் ராக்கெட்டோ விண்கலமோ அதன் இலக்கிலிருந்து பல கோடி மைல்கள் தள்ளிப் போய்விடும் .அல்லது புறப்பட்டவுடனே விழுந்துவிடும். பெரிய விண்கலம் ஆக இருந்தால் கூடுதல் எரிபொருளும் பெரிய ராக்கெட்டும் தேவைப்படும். கால நிலை முதலிய வற்றைக் கணக்கில் கொண்டு (டுயரஉ றனேடிற) ஒரு கால அட்ட வணை தயாரிக்க வேண்டும்.செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட பெரும்பாலான விண் கலங்கள் தோல்வியில் முடிந்தன. பல தோல்விகளுக்கு என்ன காரணம் என்று இன்னும் ஆராய்ந்து வரு கிறார்கள்.

                         இப்போது இதையே விசேஷ பிரார்த்தனையுடன் ஒப்பிடுங்கள். எப்படி ஈர்ப்பு விசையைத் தாண்ட வினா டிக்கு எட்டு மைல் வேகம் தேவையோ அப்படி நம்முடைய அகங்காரம், மமகாரம், தீய எண்ணங்கள், கோபம் தாபம் ஆகிவற்றைத் (ழுசயஎவைல) தாண்ட தீவிர பிரார்த்தனை வேண்டும்.
எப்படி சில நாட்களில் ஏவினால் கிரகங்களின் உந்துவிசை பயன்படு கிறதோ (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ)  அப்படி விசேஷ நாட்களில் பிரார்த் தனை செய்தால் பிரார்த்தனைக்கு உந்து விசை கிடைக்கும். அப்போது நூறு முறை நாம ஜபம் செய்தாலும் அது பல்லாயிரம் மடங்காகும்.எப்படி குறிப்பிட்ட நாட்களில் (டுயரஉ றனேடிற) ஏவினால்தான் ராக்கெட்டுகள் எளிதாக இலக்கை அடையுமோ அப்படி பண்டிகை அல்லது கிரகண காலங்களில் செய்தால் எளிதில் நினைத்ததை அடைய  லாம்.

                    எப்படி குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுகிறோமோ அப்படி குறிப்பிட்ட நேரத் தில் குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை  செய்தால் பிரார்த்தனையின் முழுப் பலனும் கிடைக்கும்.
எப்படி பெரிய ராக்கெட்டுக்கு நிறைய எரிபொருள் தேவைப்படுகிறதோ அப்படி நம்முடைய பெரிய வேண்டுகோளுக்கு நிறைய பிரார்த்தனை தேவைப்படும். ஆனால் சில நாட்களில் கிரகங்கள் (செவ்வாய், சனி) அருகில் இருந்தால் அதன் ஈர்ப்புவிசை (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ ) பயன்படுவது போல நமக்கு குறைந்த பிரார்த்தனைக்கு நிறைந்த பலன் கிடைக்கும்.ஆதி சங்கரர், சம்பந்தர் போன்றோ ருக்கு இந்த கணக்குகள் எல்லாம் ஞானக் கண்களால் தெரியும். ஆதலால் அவர்கள் நினைத்ததை முடிக்கிறார்கள். அவர்கள் கூறியது போல நாமும் பண்டிகை நாட்களில் ஒரே எண்ணத் தோடு ராக்கெட் போல குறி இலக்கு நிர்ணயித்தோமானால் எளிதில் பலன்கள் கிட்டும். நம்முடைய பிரார்த்தனைக்கும் ஒரு லாஞ்ச் விண்டோ தேவை." மேலே கண்ட செய்தியினை , தமிழும் வேதமும் என்னும் வலைத்தளத்தில் பதிந்திருக்கின் றார்கள்."

             ஏமாற்றுவதற்கு எப்படி அறிவியலையும், கடவுள் கதைகளையும் ஒப்பிடுகின்றார்கள் பாருங்கள். ஆதிசங்கரர், சம்பந்தர் போன்றோ ருக்கு ஞானக் கண்கள் இருந்ததாம், தெரிந்ததாம். நமக்கு இல்லையாம், ஆனாலும் நிறைய பிரார்த்தனை,அதீத பிரார்த்தனை செய்தால் பலன் கிட்டுமாம். இதனை நம்பக்கூடியவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதனை நம்மைப் போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்  கொள்ள வேண்டும். பிரார்த்தனை வலிமையானது என்று சொல்கின்றார் கள். தீவிர பிரார்த்தனை , விசேச்  நாட் களில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

                பிரார்த் தனை பற்றி புகழ்பெற்ற கதை ஒன்று, கலீல் கிப்ரான் அவர்களின் கதை ஒன்று உள்ளது  அவரவர் கதை என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது. "ஒரு பூனை, நாயிடம் சொன்னது - 'நண்பா, நீ முழு மனத் துடன் பிரார்த்தனை செய். தொடர்ந்து நீ இப்படி கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் ஆண்டவன்  உனக்கு அருளுவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை . கடவுளின் கருணைப் பார்வை உன்மேல் பட்டு விட்டால் போதும். வானத்தில் இருந்து எலிகளாகப் பொழியும். நீ விருப்பமுள்ள அளவுக்கு அள்ளித் தின்னலாம். இதைக் கேட்ட நாய் , விழுந்து விழுந்து சிரித்தது. - 'ஏ முட்டாள் பூனையே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டாயா?என் வீட்டிலும் பெரிய வர்கள் இருக்கிறார்கள். அவர்களும் என் முன்னோர்களும், எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்- மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பொழியாது, எலும்பு மழைதான் பொழியும். அதை நாம் ஆசை தீரக் கடித்து மகிழலாம்" (மிட்டாய் கதைகள், கலீல் கிப்ரான், தமிழில் என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்கம்-68) .  இன்னும் நாம் எலி மழை பொழியும் , பிரார்த்தனை செய்தால் என்று நம்பும் நிலைமையில் தான்  இருக்க வேண்டுமா?

                    யோசித் துப்பாருங்கள்.  நம்மை ஏய்த்துப் பிழைப்போருக்கு பலிகடாவாக ஆகத்தான் வேண்டுமா?"நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடல் உழைப்பு இலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுள் ஆணை என்றுரைத்த கயவர் கூட்டம்" என்று புரட்சிக் கவிஞர் குறிப்பிட்டாரே அப்படி கடவுளாணை என்று சொல்லி இன்னும் நமது மக்களை கல்லாமையில், அறியாமையில் , மூட நம்பிக்கையில் ஆழ்த்தி வைத்திருக்க அவர்களின் கையில் உள்ள ஆயுதம் 'பிரார்த்தனை'. அந்த மோசடியின் பல்வேறு வடிவங் களைத் தோலுரிப்போம், வாருங்கள் தோழர்களே, தோழியர்களே.

நன்றி : விடுதலை - 1-02-13 


No comments: