Saturday 12 April 2014

புல் திட்டுக்களாய் நண்பர்கள் !....




ஆழமாய் ஓடும் நதி
அங்கங்கே புல் திட்டுக்கள்

வெள்ளத்தால் இழுத்துச்
செல்லப்படும் விலங்கென
ஓடும் வாழ்க்கை ....

புல் திட்டுக்களாய் நண்பர்கள்
ஆண்களாய், பெண்களாய்
நண்பர்கள்....

புரிதல் மட்டுமே
பரிமாற்றமாய்
வெள்ளத்தனைய
மலர் நீட்டம்
உள்ளத்து உயர்வு
மட்டுமே இணைப்புக்களாய்
வாழும் நட்பு

படிப்பதுவும்
எழுதுவதும்
மனதில் தைத்ததைப்
பகிர்வதும்
பகிர்வதைப் பரப்புவதுமாய்
உயிர் வாழ்தலுக்கான
ஆக்சிஜன் காற்றாய்
வாழும் நட்பு
                            --வா. நேரு---
Nantri : Eluthu.com

2 comments:

anandam said...

படிப்பதுவும்
எழுதுவதும்
மனதில் தைத்ததைப்
பகிர்வதும்
பகிர்வதைப் பரப்புவதுமாய்
உயிர் வாழ்தலுக்கான
ஆக்சிஜன் காற்றாய்
வாழும் நட்பு // அருமை அருமை

முனைவர். வா.நேரு said...

நட்பு படை சூழ தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தங்களின் பாராட்டு நட்புக்கு... நன்றி., நன்றி.