Wednesday 20 April 2016

'பில்லி சூனியம்': ....

'பில்லி சூனியம்': இந்தியாவில் மூவர் எரித்துக் கொலை

  • 19 ஏப்ரல் 2016
பில்லி சூனிய செயல்பாடுகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டின் பேரில், அந்தக் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டை ஒரு கும்பல் தீயிட்டு கொளுத்தியது தொடர்பில், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Image copyrightGetty
Image captionஇந்தியாவின் பல மாநிலங்களில் பில்லி சூனியம் குறித்த மூடநம்பிக்கை நிலவுகிறது.
இச்சம்பவம் இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்கண்டில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
இதன் காரணமாக அந்தக் குடும்பத்தின் தலைவர் கோவர்தன் பகத் உட்பட மூவர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
அந்தக் குடும்பத்தினர் நரபலி கொடுப்பதற்காக சிறார்களை கடத்தினர் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஆனால் இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிறுவனின் தலையை வெட்டிக் கொன்றதற்காக நீண்டகாலம் பகத் சிறையில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
Image copyrightGetty
Image captionபல நாடுகளில் மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள் நிலவுகின்றன
இதேவேளை மற்றொரு சம்பவத்தில் நரபலி கொடுக்கப்படவிருந்த சிறுமி டில்லியில் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மாமாவும் வேறு இருவரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

நன்றி : பி.பி.சி. தமிழில் செய்திகள்


No comments: