Wednesday 1 June 2016

ஆண்டவர் வாத்தியார் !....

                                   கடந்து போன காலங்கள்(3)



ஆறாவதோ ஏழாவதோ
படிக்கும்போது
ஊரின் மத்தியில் இருக்கும்
வேலுச்சாமி (நாடார்) கடையில்
பொருள் வாங்கச்சென்றேன்

கடையில் 50 ரூபாய்
கொடுத்து பொருள்
வாங்க
அவரோ 50 ரூபாய்க்கு
பொருள் கொடுத்து
மீதம் 50 ரூபாயை
என் கையில் கொடுத்தார்
நூறு ரூபாய் நான்
கொடுத்ததாக எண்ணி....

நான் 100 ரூபாய் கொடுக்கவில்லை
50 ரூபாய்தான் கொடுத்தேன்
இந்தாருங்கள் 50 ரூபாய்
என்று அவரிடம்
திருப்பிக்கொடுத்தபோது

ஆண்டவர் வாத்தியார் மகன்
என்பதை நிருபிச்சிட்ட தம்பி
என்று உளப்பூரிப்போடும்
உவகையோடும்
உடல் மொழியோடு
அவர் சொன்ன வார்த்தைகள்
ஆழமாகப் பதிந்து போனது

ஆண்டவர் எனும் பட்டப்பெயர்
கொண்ட வாலகுரு வாத்தியார்
என்றால் 'நேர்மை ' என்னும்
பொருள் புரிந்து போனது ......


'நேர்மை ' என்னும்
ஆளுமை கொண்ட
அப்பாவுக்கு பிள்ளை
என்னும் பெருமிதம் இருந்தது....

                      வா. நேரு - 02.06.16

No comments: