Saturday 20 April 2024

புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா- இலக்கிய அரங்கம்


நாள் - 2: *இலக்கியரங்கம்*

*கிழக்கு நேரம்* - ஏப்ரல் 22, 2024 இரவு 9:00 மணி

*தமிழ்நாடு நேரம்* - ஏப்ரல் 23, 2024 காலை 6:30 மணி

*புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா* கொண்டாட்டத்தின் *ஏப்ரல் 21 முதல் 29* வரையிலான *9 நாள் தொடர்* நிகழ்வுகளில் *2ஆம் நாள்* நிகழ்வு. 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு ,அவரின் நினைவு நாளான ஏப்ரல் 21 முதல் அவரின் பிறந்த நாளான ஏப்ரல் 29வரை தொடர்ச்சியான இலக்கிய நிகழ்ச்சிகளை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர் மன்றம் ,டெலிவர்,அமெரிக்கா- புரட்சிக்கவிஞருக்கு பெருவிழா என்னும் தலைப்பில்  எடுக்கின்றது.அதன் ஒரு பகுதியாக நடைபெறும் 'இலக்கிய அரங்கத்தில்'  ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு (தமிழ் நாடு நேரம் )\,'இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய உலகின் பெருவேந்தர் பாரதிதாசன் ' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.தோழர்  ம.வீ.கனிமொழி,பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்,அமெரிக்கா அவர்கள் 'உயிர் நேயத்தில் இலக்கிய நயம் ' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.நிகழ்வின் தொடக்கத்தில் திருமிகு.தென்மொழிப்பண்ணன் ஈகவரசன் அவர்கள் பாரதிதாசன் பாடல்களைப் பாடுகின்றார்.அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் தலைவர் திருமிகு ரூபன் ஜெகநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.திருமிகு கல்யாணசுப்பு ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் அவர்கள் நெறியாள்கை செய்கிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர் மன்றத்தின் அமைப்பாளர் திருமிகு.துரைக்கண்ணன் துரைஎழில்விழியன் அவர்கள் இந்த 9 நாள் நிகழ்வுகளையும் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்துகிறார். பாராட்டுக்குரிய பணி.வாருங்கள் நண்பர்களே,தோழர்களே,உறவுகளே,நிகழ்வுக்கு வாருங்கள்.

 

No comments: