Sunday 9 October 2011

புரட்சிக் கவிஞர் பாடல்

இந்த வாரம் படித்து மனப்பாடம் செய்த புரட்சிக் கவிஞர் பாடல்
“ கோவில் பல கட்டுகின்றீர்
குளங்கள் பல வெட்டுகின்றீர்
கோடை நாளில்
வாயிலுற நீர்ப்பந்தல்
மாடுறிஞ்ச நெடுந்தறிகள்
வாய்ப்பச்செய்தீர்
தாயிலும் பன்மடங்கு அன்போடு
மக்கள் நலம் நாடுகின்றீர்
ஆயினும் தமிழ் நாட்டில்
செயத்தக்க இன்னதென்று
அறிகிலீரே “ என்று சொல்கின்றார்.

புரட்சிக்கவிஞர் பாடி ஏறத்தாழ 60,70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கும் தமிழர்களுக்கு தமிழ் வளர, தமிழ் வளர்க்க என்ன செய்வது என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கின்றார்களா?

நாங்கள் ஒரு பெரிய பணக்காரப் பெரியவரை பள்ளிக்கூடம் கட்டப் பணம் வேண்டும் என்று கேட்டச்சென்றபோது , எந்தவித தயக்கமும் இல்லாமல் பளிச்சென்று கூறினார், “ நான் கோவில் கும்பாவிசேகம் மற்றும் கோவில் திருப்பணிகள் தவிர வேறு எவற்றுக்கும் பணம் தருவதில்லை “ என்றார். பேசிப்பார்த்து பின்பு எந்த நன்கொடையும் அவரிடமிருந்து வாங்கமுடியாமல் திரும்பிவந்தோம். அவர் பார்ப்பனர் அல்ல, பரம்பரை பணக்காரர் அல்ல ,உழைப்பால் முன்னேறி பணம் பெற்றவர்தான் . வாய்ப்பு வசதிகள் வந்தவுடன் அது கடவுளாள்தான் வந்தது,எனவே அதைத்தவிர வேறு எவற்றுக்கும் பணம் கொடுக்க்க்கூடாது என நம்புகின்றார்.

அதைத் தகர்ப்பது எப்படி ? கடவுளுக்கு கொடுப்பது என்றால் பார்ப்பனருக்கு கொடுப்பது , அதனால் தமிழ் வளருமா? தமிழ் நாடு வளருமா?

“ தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவு உயரும்
அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
ஒரு நாடும் தன்
மொழியில் தாழ்ந்தால் வீழும்”
கோவிலுக்கு கொடுப்பதால் தமிழர் நிலை உயருமா? உறுதியாக உயராது
அப்போது என்ன செய்ய வேண்டும் ?

தமிழுக்குப் பொருள் கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவிடுங்கள்
தமிழ்ப்பள்ளி, கல்லூரி
தமிழ் ஏடு பலப்பலவும்
நிலைப்பச்செய்வீர் “ என்று அறிவுறுத்துகின்றார் புரட்சிக்கவிஞர். செய்தோமா?

தமிழுக்குப் பொருள் கொடுங்கள் என்றால் , நமது ஆள் கம்பன் புகழ் பாடும் கழகங்களில் போய் விழுகின்றான் , மீண்டும் அந்த பார்ப்பன வளையத்துக்குள் எளிதாக மாட்டிக்கொள்கின்றான். கொஞ்சம் பேசத்தெரிந்த ஆட்களெல்லாம் கம்பன் புகழ் பாட, பெரிய புராணம் பற்றி விரிவுரையாற்ற கிளம்பி விடுகின்றான்.கொஞ்சம் பெயர் வெளியே பிரபலமாகின்றது, பேசப்போனால் பணம் கிடைக்கிறது, விளம்பரம் கிடைக்கின்றது.பின் தமிழ் எப்படிப்போனால் என்ன? தமிழ்நாடு எப்படிப்போனால் என்ன?

தமிழறிஞர் கழகங்கள் எப்படி இருக்கின்றன? திருவள்ளுவர் கழகம் என்று பெயர் இருக்கின்றது, சரி அங்கு திருக்குறளின் பெருமை பேசப்படுகின்றதா? திருக்குறளுக்கு நுட்பமான விளக்கங்கள், விரிவுரைகள்,மேலை நாட்டு இலக்கியங்களோடு ஒப்பிடல் இவையெல்லாம் நடக்கிறதா என்றால் இல்லை, இல்லை. அங்கும் நமது ஆள் கம்பராமாயணத்தை பற்றியும், பெரியபுராணம் பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறான்.

படித்தவர்களைச் சுற்றியும் பணக்கார்ர்களைச்சுற்றியும் பார்ப்பனர்கள் மிக நுட்பமான பதுங்குகுழிகளை அமைத்திருக்கின்றார்கள்.தமிழர்களை எளிதாக அதில் பதுங்கிக்கொள்ள பார்ப்பனர்கள் பழக்கிவிடுகின்றார்கள் .பேச்சாளன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வரமறுக்கின்றான், பணக்காரன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வர மறுக்கின்றான். அவர்களை அதனைத் தாண்டி வர பழக்கவேண்டும் அதற்கு புரட்சிக்கவிஞரைப் படிக்கச் சொல்லவேண்டும்.

வா.நேரு – 08.10.2011

1 comment:

anandam said...

படித்தவர்களைச் சுற்றியும் பணக்கார்ர்களைச்சுற்றியும் பார்ப்பனர்கள் மிக நுட்பமான பதுங்குகுழிகளை அமைத்திருக்கின்றார்கள்.தமிழர்களை எளிதாக அதில் பதுங்கிக்கொள்ள பார்ப்பனர்கள் பழக்கிவிடுகின்றார்கள் .பேச்சாளன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வரமறுக்கின்றான், பணக்காரன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வர மறுக்கின்றான். அவர்களை அதனைத் தாண்டி வர பழக்கவேண்டும் அதற்கு புரட்சிக்கவிஞரைப் படிக்கச் சொல்லவேண்டும்.
ஆழமான,ஆராய்ச்சிப் பூர்வமான வரிகள்.தொடரட்டும் உமது பதிவுகளும்.....தமிழர் விடியலுக்கான கதவுகளும்--சுப.முருகானந்தம்.