Tuesday 25 October 2011

உதைக்கும் கழுதையின்

பூமாதேவி
ஒரு கடவுள்
பன்றி
ஒரு கடவுள்
பன்றியும்
பூமாதேவியும்
போகம் செய்ததால்
நரகாசுரன் பிறந்தானாம்

கதை சொன்னேன்
இந்தக் கதை
எல்லாம் யார்
நம்புகிறார் என்றான்

எந்தக் கதையை
வைத்து சேது
சமுத்தரத் திட்டம்
தடுக்கப்பட்டது
நிறுத்தப்பட்டது என்றேன்

ஆமாம்ல என்றான்
தீபாவளி என்றால்
தீப ஒளித் திருநாள்
அல்லவோ என்றான்

இல்லை இல்லை
இது ஆரியப் பகட்டு
உடன்பிறப்பே உனக்கே
இது புரியவில்லையே என்றேன்

உதைக்கும் கழுதையின்
காலுக்கு உதை வாங்கியோன்
தங்கத்தால் இலாடம் கட்டுவதும்
ஆட்டை அழைத்து
ஓநாய்க்கு விருந்தளி
எனக் கூறுவதும்
கொட்டும் தேளை
எடுத்து கண்ணில்
ஒத்திக் கொளவதும்
தமிழன் தீபாவளி
கொண்டாடுவதும் ஒன்று
என்றார் அண்ணா!

அறிவாயோ !
உடன்பிறப்பே அறிவாயோ!
அண்ணாவின் படத்தோடு
கட்சி நடத்துவோர்
தீபாவளி வாழ்த்துக்
கூறுகின்றார்
அது ஆரியம்
நுழைந்ததால்
விழுந்த ஓட்டை

உனக்கோ பழைய
வரலாறை நூலை
அறியாததால்
வந்த ஓட்டை என்றேன்


தனக்கு ஏற்பட்ட
இழிவைக் கொண்டாடும்
இனமாய் தமிழனை
தர்ப்பைப்புல்காரன்
ஆக்கி வைத்தான்
தடுமாறலாமா ?
உடன்பிறப்பே தடுமாறலாமா?
தடம் மாறலாமா ?
உடன்பிறப்பே தடம் மாறலாமா?

No comments: