Saturday 31 December 2011

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

நூலின் தலைப்பு : முழுமையாகச் செய்யுங்கள் ( DO IT TI A FINISH )

மூல நூலின் ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன்
தமிழில் : மலர்க்கொடி B.A.
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600017 தொலைபேசி: 2433 2682
முதற்பதிப்பு : நவம்பர் 2005
நான்காம் பதிப்பு : ஜீலை 2010
மொத்த பக்கங்கள் : 56
விலை : ரூ 28.

மொத்தம் 9 தலைப்புகளில் உள்ள 56 பக்கம் உள்ள புத்தகம். முழுமையாக, அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் . மொழி பெயர்ப்பாளருக்கு பாராட்டுக்கள்(ஆங்கிலத்தில் உள்ளதையும் படித்ததால்) .

முழுமையாகச் செய்தல் என்றால் என்ன? ஏன் முழுமையாகச் செய்ய வேண்டும், ஒரு சிறு கவனக்குறைவு எப்படியெல்லாம் பாதிக்கும் போன்ற பல்வேறு தகவல்களை ஆரிசன் விவரிக்கும் போக்கே தனித்தன்மையானது. இளைஞர்கள் அதிலும் குறிப்பாக ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளை அரைகுறையாகச் செய்துவிட்டு பரபரவென்று தெரிவோர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். தொழிலுக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பு (THE RELATION OF WORK TO CHARACTER) என்னும் அத்தியாயம் 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை " என்பதனை விளக்கும் அத்தியாயம் எனலாம். தனக்கு உண்மையாயிருத்தல், நேர்மையாயிருத்தல் போன்றவையே சாதிக்கத் துணை புரியும் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியிருக்கிறார். பக்கம் 49,50 ல் உள்ள பிரபல நீதிபதி, வேலி கட்டிய இளைஞன் ஒரு நல்ல எடுத்துக்காட்டான பதிவு.

வா.நேரு -31-12-11

No comments: