Tuesday 3 January 2012

அண்மையில் படித்த புத்தகம் : சந்தித்ததும் சிந்தித்ததும்

நூலின் தலைப்பு : சந்தித்ததும் சிந்தித்ததும்

ஆசிரியர் : முனைவர் கு.ஞானசம்பந்தன்

வெளியீடு : அமுதம் பதிப்பகம், மதுரை-20

முதல் பதிப்பு : செப்டம்பர் 2011

மொத்த பக்கங்கள் : 76

விலை : ரூ 60


பிள்ளைகள் பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளைத்தான் தொலைக்காட்சிகளில் பார்க்க விரும்புகிறார்கள், செல்லும் பேருந்துகளில் திரைப்படத்திற்குப் பதில் நகைச்சுவைக் காட்சிகளை ஒலிபரப்புகிறார்கள், அந்தளவிற்கு டென்சன் மிகுந்த பர பர உலகில் நகைச் சுவையின் தேவையிருக்கிறது. ஒரு சிறந்த , படிக்கும்போதே நம்மை வாய்விட்டு சிரிக்கவைக்கும் புத்தகமாக 'சந்தித்ததும் சிந்தித்ததும் ' வந்திருக்கிறது.

10 கட்டுரைகளின் தொகுப்பு. கமல் பற்றி, எழுத்தாளர் சுஜாதா பற்றி, பாக்யராஜ் பற்றி, மதுரையில் இருந்த தங்கம் திரையரங்கு பற்றி, சுற்றுலா சென்றது பற்றி, கையில் காசில்லாமல் ஓசியில் தீபாவளிக்கு வேட்டுப் போட அலைந்தது பற்றி என்று பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை கூறியுள்ளார்.

பேச்சில் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல், எழுத்திலும் வந்திருப்பது வியப்புதான். பாராட்டுக்குரியதுதான். அதிலும் இள்வயதில் வைகை அணைக்கு சுற்றுலா கூப்பிட்டுச் சென்றதில் இருக்கும் நகைச் சுவை இருக்கிறதே ,அப்பப்பா.... நேற்று இரவு இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு சிரித்துக்கொண்டே படுத்தேன். இன்று காலை மீதம் இருப்பதை படித்துவிட்டு சிரித்துக்கொண்டே கணினி முன் அமர்ந்திருக்கிறேன்.

கடுமையான வேலைப்பளுவில் இருப்பவர்களிடம் கொடுத்து , கொஞ்சம் படித்து, சிரித்து ,இளைப்பாறுங்கள் என்று கூறலாம்.

வா.நேரு, 4.1.2012

No comments: