Thursday 17 November 2016

தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை: ஹிலரி



ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தோல்வியடைந்த பிறகு, தான் கலந்து கொண்ட முதல் பொது சந்திப்பில், அதிபர் தேர்தலில் தான் டொனால்ட் டிரம்பிடம் தோல்விடைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தனது பேச்சில் ஹிலரி கிளிண்டன்அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

வாஷிங்டன் டிசியில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீண்டும் தனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே தான் விரும்பவில்லை என்று கூறினார்.
ஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டியதாக தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில், மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை ஹிலரி பெற்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க தேர்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை பெறும் போட்டியில் அவர் தோல்வியடைந்தார்.

ஹிலரி தோல்வி குறித்து மேலும் படிக்க:ஹிலரி ஏன் தோற்றார்?

குழந்தைகள் பாதுகாப்பு நிதி அமைப்பினால் கெளரவிக்கப்பட்ட ஹிலரி கிளிண்டன் அந்நிகழ்ச்சியில் பேசுகையில், ''இன்றிரவு இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக இருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
தொடந்து அவர் உரையாற்றுகையில், ''தேர்தல் முடிவுகளால் உங்களில் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை போலவே, நானும் இது வரை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளேன்''
''இது எளிதில்லை என்பது எனக்கு தெரியும். கடந்த வாரத்தில் பலரும் நாம் நினைத்த அமெரிக்கா தானா இது என்று தங்களை தாங்களே கேட்டுக் கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.

நன்றி : பி.பி.சி.தமிழ் 17.11.2016

No comments: