Sunday 26 February 2017

எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.......

திராவிடர் கழகத்தோழர்களின் இல்ல நிகழ்வுகள்  தந்தை பெரியாரின் தத்துவத்தை,கொள்கையை பறைசாற்றும் விழாக்களாகத்தான் பல்லாண்டுகளாக நடைபெறுகின்றன. எட்டிக்காயென எட்டி நிற்போர் கூட கழகத்தோழர்களின் அணுகுமுறையால் பலாச்சுளையென உணர்ந்து கொள்வதைக் காணமுடிகின்றது வாழ்க்கை முழுவதும். அந்த வகையில் அண்மையில் நடந்த வேலூர் மண்டலத் திராவிடர் கழகத்தலைவரும், லிட்டில் பிளவர் என்னும் பள்ளியின் தாளாளருமான அய்யா வி.சடகோபன் இல்லத்திருமண நிகழ்வும் சிறப்புக்குரியதாகும். அந்த நிகழ்வினைப் பற்றியும் , நன்றியும் கூறி அய்யா சடகோபன் அவர்களின் கடிதம் இன்றைய விடுதலையில்(26.02.2017) வந்துள்ளது. இனி அந்தச்செய்தி தங்கள் பார்வைக்கு.....

இல்ல இணைஏற்பு விழாவின் மூலம் விளைந்த கொள்கை விளைச்சல்


வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, அன்பு கனிந்த வணக்கம்.

எங்கள் இல்ல இணை ஏற்பு விழாவிற்கு தங்களின் வாழ்த்துரை மிக அருமையாக அமைந்திருந்தது. எங்கள் குடும்பத் தலைவராயிருக்கும் இனத்தலை வரின் வாழ்த்துரையை மணவிழாவிற்கு வந்தி ருந்த உறவினர்களும், நண்பர்களும், நம் கழகக் குடும்பத்தினரும் வெகுவாகப் பாராட்டினர். தாங்களே நேரில் வந்து வாழ்த்தியதைப் போன்று அனைவரும்கூறினர்.இரத்தினச்சுருக்கமாக3 நிமிடங்களில் எங்களின் இயக்க உழைப்பு, வாழ்வில் நாங்கள் அடைந்த உழைப்பின் வெற்றி, அடுத்த தலைமுறையினரையும் இயக்கத்தின்பால் ஈடுபடுத்தும்உணர்வுஅத்தனையையும்நினைவு கூறி குறிப்பிட்டது, உறவினர்கள் இயக்க ஈடு பாட்டிற்காக எங்களை கடந்த காலங்களில் அவ மதித்து, அசிங்கப்படுத்தியமை எல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோனது. உறவுகள் எங்களை உயர் வாய் மதிப்பீடு செய்யுமளவிற்கு உயர்த்தியது. நல்வாய்ப்பாக தங்களின் உரையினை குறித்த நேரத்தில் ஒளிபரப்பி அனைவரையும் கண் ணுறச் செய்ததில், நம் இயக்கத்தின் புகழ் எளிய மனிதர்களையும் சென்றடைய நல்வாய்ப்பாக அமைந்தது.மணமகள்வீட்டார்பக்திமூடநம் பிக்கைக் கொண்டோர். ஆனாலும் ஆர்ப்பாட்ட மில்லாமல் நாங்கள் செய்த திருமண ஏற்பாட்டினை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். தங்களின் ஆழ்ந்த சிந்தனை உரை அவர்கள் நெஞ்சினையும் தொட்டது எனப் பாராட்டினர். மணமக்கள் விழிக்கொடையும், உடற்கொடையும் அளித்த நிகழ்ச்சியை அனைவரும் இமைகொட்டாமல் பார்த்து வியப்படைந்தனர்.

அதோடு கழகத் துணைத்தலைவர் கவிமாமணி கலி.பூங்குன்றன் அய்யா அவர்களின் எளிய நடை குறிப்பாக பெண்களின் மனதைத் தொட்டது. புராண இதிகாசங்களும், வருணதர்மத்தை கூறும் மனுதர்மம் - குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் ஆதாரங்களை எடுத்துக்கூறியதை பெண்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டனர். நம் இயக்கத்தின் பிரச்சாரத்தையோ, புத்தகங்களையோ அறியாத பெண்கள் பலர், என்னிடம் வந்து, “ஏங்க நாங்கள் செய்கின்ற திருமணங்களில் இவ்வளவு அசிங்கங்கள் இருக்கிறதா?” என வியப்புடன் கேட்டனர். பெரியார் தொண்டர்களின் மான உணர் வினையும், இனஉணர்வினையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்.

நமது இயக்கத்தின் பல கூட்டப் பிரச்சாரத் தினையும், அப்போதே அதன் பலனையும் கண் கூடாகப் பார்த்த அனுபவம் இம்மணவிழாவின் மூலம்கிடைத்தது.இயக்கப்புத்தகங்கள்ரூ.5000-த் திற்கு விற்பனையானது. கழக வெளியீடுகள்-சுயமரியாதை திருமணம் ஏன்?, அய்யாவின் சிந்தனை நூல்வரிசை - 5, தமிழர் மீது பார்ப்பனர் தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பு, மாணவர் களுக்கு அய்யாவின் சிந்தனைத் தொகுப்பு போன்ற 5 வகையான நூல்கள் 2000 புத்தகங்கள் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டன. மரக்கன்றுகள், காய்கறிச்செடிகள் இருவேளையும் 4000 வழங்கப்பட்டன. மணவிழா மூலம் அமைதி யான இயக்கப்பிரச்சாரம் நடைபெற்றது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

கவிஞர் அவர்கள் எங்கள் இல்லத்திருமணத் திற்கு வருகைதந்து வாழ்த்துரை வழங்கியது எங்களுக்கெல்லாம்நல்வாய்ப்பாகஅமைந்தது. மணவிழாவிற்கு வந்திருந்த பெரியார் பெருந் தொண்டர்கள் சத்துவாச்சாரி இரட்டையர்கள் பொதுக்குழுஉறுப்பினர்இரா.கணேசன்,மாவட்ட கழக அமைப்பாளர் ச.கி.செல்வநாதன் ஆகி யோரையும் நேர்காணல் மூலம், அவர்களின் 60 ஆண்டுகளுக்கும்மேலான இயக்க ஈடு பாடு, இயக்கத்திற்கு அளித்த உழைப்பு, சமு தாயத்தில் அவர்கள் சந்தித்த போராட்டங்கள், கழகப்போராட்டங்களின் முன்னணி வீரர்களாக பங்கேற்றது அத்தனையையும் மிக நேர்த்தியாக தொகுத்து கவிஞர் அவர்கள் ‘விடுதலை’ ஞாயிறு மலரில் வழங்கினார்கள். ஞாயிறுமலரைப் படித்த அப்பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி; எனக்கும் தொலைபேசியில் நன்றி தெரிவித்தனர்.

அன்றே மாலை நிகழ்வாக, என்னுடைய பள்ளியான லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் அன்னை மணியம்மையார் அரங்கில், சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன? என்ற தலைப்பில் கவிஞர் அவர்கள் இயக்க வரலாற்றினையும், தமிழர் மானவுணர்வு பெற்ற நிகழ்ச்சிகளையும் விளக்கினார். மாணவர்களும், இருபால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அரங் கம் நிறைந்து, கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியும் நிறைவாக அமைந்தது.

இல்லமணவிழா நிகழ்ச்சியையும், பள்ளி விழாவினையும், கொள்கை விளக்கப் பிரச்சாரத் தினையும் ‘விடுதலை’ மூலமாக கண்ணுற்றக் கழகத் தினர் தொலைபேசி மூலம் மகிழ்ந்து பாராட்டினர்.

கடந்த 20.02.2017 ஆம்பூரில் நடைபெற்ற கழகக்தொண்டரின் மணவிழாவில் கலந்து கொள்ள நானும், எனது இணையர் ஈஸ்வரி அவர்களும் சென்றபோது மணவிழாவிற்கு வருகைதந்த கழகத் தோழர்கள் ‘விடுதலை’யில் படித்துவிட்டு, அழைப்பிதழ் கிடைக்கப் பெறாததற்கும், பங்கேற்று இம்மகிழ்வான மணவிழாவினையும், பள்ளியில் நடைபெற்ற விழாவினையும் காண வாய்ப்பில்லாமல் போனமைக்காகவும் வருத்தப்பட்டனர். எங்கள் மீது கோபித்தும் கொண்டனர்.

எங்கள்இல்லவிழாவில்தங்களின்வாழ்த்து ரையும், கவிஞரின் வாழ்த்துரையும் உணர்ச்சி யூட்டுவதாய் அமைந்தது. அதேபோன்று தமிழர் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மிகச்சிறப்பாக இயங்கிவரும் எங்கள் பள்ளியில் சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா கருத்தரங்கத்தில் கவிஞர் அவர்களின் அறிவியல் விளக்கங்களுடன் அமைந்த உரை எங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர் களுக்கும் நல்வாய்ப்பாக அமைந்தது. அனைவரின் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

13.02.2017 அன்று நடைபெற்ற அடுக்கடுக்கான இயக்கப்பிரச்சார நிகழ்ச்சிகளால் நாங்கள் நூறாண்டு வாழ்ந்து இயக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்ற உறுதியையும் அளித்தது. கழகம் எங்களுக்கு அளித்தஇந்தப்பெருமைக்கு என்றென்றும் நன்றி யுடையவர்களாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். நன்றி, நன்றி, நன்றி!

- வி.சடகோபன்

தலைவர், வேலூர் மண்டல திராவிடர் கழகம்

நன்றி : விடுதலை 26.02.2017



2 comments:

PUTHIYAMAADHAVI said...

வாழ்த்துகள் அய்யா.

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அம்மா.....