Thursday 2 March 2017

பகுத்தறிவே சிறந்த வழி காட்டி.......மறவாதீர்!..

மனித வாழ்க்கையில் - முற்றிலும் பகுத்தறிவையே பயன்படுத்தித்தான் வாழ்வார்கள்; வாழவேண்டும் என்பது இயற்கையான வாய்ப்பு என்றாலும் கூட, நம்மில் பலரும் அப்படி வாழ் வதில்லை; பெரும்பாலோர் அப்படி வாழ விரும்புவதே இல்லை.

காலங்காலமாக எப்படி மற்றவர்கள் வாழுகிறார்களோ அப்படியே ‘செக்கு மாட்டு வாழ்க்கையே’ வாழுகிறார்கள்!

இன்னும் பலர் பழைய பாதையே பாதுகாப்பானது என்ற பயத்தின் கார ணமாக, ஒருவகை அடிமை வாழ்க்கை யில் வாழுகிறார்கள்! அடிமைத்தனம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது மூளை அடிமைத்தனத்தைத்தான்!

சிலர் அதைப் பெருமையுடன் கூறி ‘கித்தாப்பு’ அடைகின்றனர்! தன் பெருமை, தன் சக்தி, தன் சாதனை என்று தம்பட்டம் அடித்து மகிழ்வது தான் அவர்கள் சிக்கிய போதையாகும்!

எடுத்துக்காட்டாக, கடை வீதியில் நடந்துகொண்டே வந்தவர், ஒன்று வாங்கினால் மேலும் இரண்டு ‘இலவசம்‘ என்ற விளம்பரம் கண்டு திகைத்தவராக, உடனே அவரது தேவையை உத்தேசித்தோ யோசிக் காமலே, அவரிடம் உள்ள கடன் (கிரெடிட் கார்டு) அட்டையைப் பயன்படுத்தி உடனே அக்கடையில் நுழைந்து வாங்கி வருகிறார். எந்தக் கடைக்காரரும் நட்டத்தில் வியாபாரம் செய்யமாட்டார்களே, இவர் மட்டும் ஏன் இப்படி விளம்பரம் செய்கிறார் என்று ஒருகணம்கூட பகுத்தறிவுக்கு வேலை தருவதில்லை; தான் ஏதோ மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பை இதன்மூலம் பெற்றுவிட் டோம் என்ற ஒருவகை போலிப் பெருமையில் (அதுவே ஒரு வகை போதைதான்) மிதந்து வருவார்!

மனித வாழ்வில் உணர்ச்சிகளின் திடீர் ஆக்கிரமிப்பு - படையெடுப்பு - பகுத்தறிவுக்கோ, தர்க்க ரீதியான சிந்தனைக்கோ இடம்பெறுவதில்லை!

கடைகளுக்குச் சென்று வாங்குவது என்பது பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தால், கண்ணுக்கும், காதுக்கும், தமது பெருமைக்கும் இடம் தருவதற்கான கொள்முதலாக இருக் கக்கூடாது - பகுத்தறிவின்படி பார்த் தால்!

எது நமக்கு இன்றியமையாததோ, அதைக் குறித்து வைத்து, அதற்கான ‘பட்ஜெட்’ நமக்கு உள்ளதா என்று ஆராய்ந்து, கையில் உள்ள சேமிப் பையோ அல்லது சம்பாதனையின் கீழ்வரும் பட்ஜெட்டையோ பற்றி மட்டும் கவலை கொண்டால், நிச்சயம் நாம் ‘கடனாளி’யாகி விடமாட்டோம்!

ஆனால், ஆசையும், வீண் பெருமையும், பதவி ஆசையைவிட மிகவும் கொடுமையானது! சூதாட்டத் தில் வெற்றி பெற்றவனும் எழுவ தில்லை (சிலர் வேண்டுமானால் விதிவிலக்கு) தோற்றவனும் எளிதில் எழுவதில்லை. இருவரையும் ஒன்றே ஈர்த்து எல்லாவற்றையும் இழக்கச் செய்வது பற்றிய யோசனையே இல்லாது இருப்பது உலக இயல்பாகி விட்டது!

பகுத்தறிவு பலவிடங்களில் தோற்று ஒதுங்கிக் கொள்ளுகிறது; உணர்ச்சிகள் கோலோச்சத் தொடங் கிய இடத்தில்! அதன் விளைவு காலங்கடந்த ஞானோதயம்!

அளவுக்கு மீறிய சொத்து சேர்த்துக் கொண்டே செல்வதில் சுவை கண்ட வர்கள் - தங்களது மரண வாக்குமூலத் தில் எதைக் குறிப்பார்கள்?

யான்கண்ட சுகம் ஒன்றுமில்லை உண்மையே! இடையில் ஏற்பட்ட போதை - பண போதை - சொத்து போதையைத் தவிர என்பார்கள்!

எதற்கும் எல்லை உண்டு என்ப வர்கள் பகுத்தறிவைத் தாராளமாகப் பயன்படுத்தியவர்கள், இறுதியில் தொல்லை அடைவதில்லை - இடை யில் இடையூறுகளால் அலைக்கழிக் கப்பட்டாலும்கூட!

எனவே, பகுத்தறிவே சிறந்த வழி காட்டி என்பதை மறவாதீர்!...

திராவிடர் கழகத்தலைவர், பகுத்தறிவாளர் கழகப்புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்-

நன்றி : விடுதலை 02.03.2017

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா
பகுத்தறிவின் வழி வாழ்வோம்