Thursday 26 July 2018

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' ..

அன்புடையீர்,
            வணக்கம். எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' -சென்னை எம்ரால்டு பதிப்பகத்தின் பிரிவான எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு வெளிவந்துள்ளது. சிறிய அளவிலான ஒரு வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும். எம்ரால்டு பதிப்பகம், மற்றும் பிளிப்கார்டு நிறுவனங்களில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கலாம். அட்டைப்படத்தை அழகுற வடிவமைத்துக்கொடுத்த, தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆயிரம் வேலைகளுக்கும் நடுவிலும் அருமையான கற்பனைத் திறனோடும், கைவண்ணத்தோடும் அமைத்துக்கொடுத்த அவருக்கு நன்றி,நன்றி.. கதைகளை ஒன்றுபடுத்தி அச்சிட்டுக்கொடுத்த அன்புத்தோழர், எழுத்தாளர் உடுமலை வடிவேலு அவர்களுக்கும் நன்றி.
தொகுப்பைப் படித்துப்பார்த்து தங்கள் கருத்துக்களை, விமர்சனங்களைத்  தெரிவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் அடுத்தடுத்து எழுதுவதற்கு உறுதுணையாகவும்  அமையும்




2 comments:

anandam said...

வாழ்த்துகள் அண்ணே...விரைவில் வெளியிடுவோம்....

முனைவர். வா.நேரு said...

அண்ணே, நன்றி.....