Sunday 31 May 2020

செய்ய வேண்டியன செய்தலுக்காய்....

அய்ம்பத்து ஆறு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கிறது...
அய்ம்பத்து ஏழு இன்று
பிறந்திருக்கிறது....

அய்ம்பத்து ஆறில் வாழ்வில்
நிகழ்ந்த பெரும் நிகழ்வு
விருப்ப ஓய்வு எனும் நிகழ்வு...

சென்ற வருடப் பிறந்த நாளில்
துளி கூட எண்ணமில்லை...
அடுத்த பிறந்த நாளில் நாம்
விருப்ப ஓய்வில் இருப்போமென்று...

மறைமுக அரசின் அழுத்தங்களும்
பணிச்சுமை தந்த அழுத்தங்களும்
இணைந்து விருப்ப ஓய்வு எனும்
முடிவினைத் தந்தது....எனினும்
மகிழ்ச்சி தரும் முடிவே இது....

இருக்கும் வாழ்வை
குடும்பத்தினருக்கு கூடுதல் நேரமும்
இயக்கத்திற்கும்
வாசிக்க எழுத என
உள்ளத்திற்கு உகந்தவை
அனைத்தும் செய்திட விருப்பம்....

முப்பத்தாறு ஆண்டுகள் பணியை
முழுவதாய்ச்செய்ததாக மன நிறைவு...
எத்தனை மனிதர்கள்..
எத்தனை தொழில் நுட்பங்கள்...
ஒரு நாவலுக்குள் அடக்கமுடியாத
அத்தனை அத்தியாயங்களும்
மனதுக்குள் ஓடும் பணி நிகழ்வுகள்...

சிறந்த ஊழியன் எனப் பெற்ற
தங்கப் பதக்கம் சான்றிதழைவிட
மனதார வாழ்த்திய வாடிக்கையாளர்களால்
நிறைவாக பணிக்காலம் முடிந்தது...

சராசரி இந்தியனின் வாழ்விற்கு
சில வருடங்களே இன்னும் பாக்கி..
அதற்குள் செய்ய வேண்டியன
செய்தலுக்காய் திட்டமிடலும்
செயல்படுத்தலுமே மீத வாழ்க்கையாய்..
                                                                         வா.நேரு...31.05.2020



5 comments:

M.anbukkarasan said...

அருமையான சிந்தனைகள் சிறப்பு சிறப்பான பதிவு நினைவுகளை புத்தகமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

anandam said...

செய்ததும் செய்யப் போவதும் செய்ய வேண்டியன மட்டுமே தான்... நிறைவாழ்வு நெடுவாழ்வு நீங்காப் புகழ்வாழ்வு காண வாழ்த்துகள்

முனைவர். வா.நேரு said...

அண்ணே,வணக்கம். நன்றி வலைத்தள வருகைக்கும் கருத்திற்கும்

முனைவர். வா.நேரு said...

நிறைவாழ்வு.....வணக்கம். நன்றி

தமிழ் ஓவியா said...

வாழ்த்துகள் அய்யா