Tuesday 3 August 2021

திராவிட மாடல்...வாருங்கள் படிப்போம் ....அய்யா ஆசிரியர் அவர்கள் உரை(3)

 மக்களுக்கு பயன்படக்கூடிய இரண்டு செய்திகளை மட்டும் இந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறேன்.ஒன்று கல்வி.மற்றொன்று மக்கள் நல்வாழ்வு.இன்றைக்கு கரோனா காலம். நாம் ஒவ்வொருவரும் இந்தக் காலத்திலே அஞ்சி, அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.அதிலும் இரண்டாவது வீச்சு. .எங்கே மூன்றாவது வீச்சிற்கு போய்விடுமோ என்று நாம் அஞ்சிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்திலே ,ஒவ்வொருவருக்கும் துணிச்சலும் ஆறுதலும் தேவை ..சிகிச்சையும் தேவை என்று நினைக்கின்ற நேரத்திலே இன்னும் ஏராளமான மருத்துவ வசதிகளும் வாய்ப்புகளும் ,அடிக்கட்டுமானங்களும் வராதா என்ற ஏக்கத்திலே நாம் இருக்கிறோம்.அதே போல கல்வி என்பது  ஒரு காலத்திலே எப்படி இருந்தது? தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.கல்வி என்பது எல்லோருக்கும் கிடைத்ததா?.மிகத்தெளிவாக கா.பா.அறவாணன் அவர்கள் தமிழன் அடிமையானது எவ்வாறு என்ற  ஒரு நூலில் எழுதுகிறபோது சேர,சோழ,பாண்டிய அரசுகளாக இருந்தாலும் மக்களுக்கு கல்வியைக் கொடுக்கவில்லை.1901வரை தமிழர்களில் படிக்கத்தெரிந்தவர்கள் வெறும் ஒரெ ஒரு சதவீதம். கூட இல்லை,அதற்கும் குறைவான சதவீதம் என்று ,ஒரு 120 ஆண்டுகளுக்கு முன்னால் என்பதனை எடுத்துக்காட்டி அவரது  நூலில் எழுதியிருக்கிறார்.காரணம் என்ன?.படிக்க வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.எப்படி மறுக்கப்பட்டன?.வர்ணாசிரம தர்மம்.அந்த்த் தத்துவம்தான் திராவிட்த்திற்கு நேர் எதிரான தத்துவம்..அந்தத் தத்துவம் மனுதர்ம தத்துவம்.குலதர்ம தத்துவம்.


 எனவே திராவிடத்தத்துவம் சமத்துவ தத்துவம்.வர்ணாசிரமத் தத்துவம் சமத்துவத்திற்கு எதிரானது.அதனால்தான் காலம் காலமாக படிப்பு மறுக்கப்பட்டது.மற்ற  நாடுகளில் கூட பேதம் உண்டு.அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாக ஒரு கருத்தைச்சொல்கிறார்.”What Gandhi and Congress have  done to Untouchables “ என்று ஒரு நூல்,1944-லேயே அம்பேத்கார் எழுதினார்.அந்த நூலிலே ஒன்றைத் தெளிவாகச்சொல்கிறார்.மற்ற நாடுகளில் கூடப் பேதம் உண்டு.அங்கே கறுப்பர்கள்,வெள்ளையர்கள் என்ற பேதம் உண்டு.ஆனால் அங்கே கூடப் படிக்க்க்கூடாது என்று சொன்னதில்லை.மீறிப்படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவோம்,இதை நீ மீறிப் படித்தால் உனது நாக்கை அறுப்போம் என்று சொன்னதில்லை.நாங்களாக கற்றுக்கொடுக்க மாட்டோம் என்பது மட்டுமல்ல,தானாக நீ கற்றுக்கொண்டாலும் விடமாட்டோம் என்று சொல்கிறார்கள் என்பதை எடுத்துச்சொன்னார்கள்.உதாரணமாக மண்டல் கமிசன் அறிக்கையிலே சொல்கிறபோது ஒன்றைச்சொன்னார்கள்.மண்டல் கமிசன் என்பது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச்சார்ந்த மக்கள் மத்திய அரசாங்கத்திலே குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடவாய்ப்பு இல்லை என்பதை ஆய்வு செய்வதற்காக ,அரசியல் சட்டப்படி போடப்பட்ட,மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு.அந்தக் குழு ஓர் அறிக்கையைக் கொடுக்கிறார்கள்.அந்தக் குழுவிற்குத்தலைவர் மண்டல்.அந்த அறிக்கையிலே எழுதுகிறபோது துரோணாச்சாரியார் ,ஏகலைவன் அந்தச்சம்பவத்தை அதிலே சுட்டிக்காட்டுகிறார்.சம்பூகன் கதையை எடுத்துக்கூறுகிறார்.இராமன் எப்படி சம்பூகனின் தலையை வெட்டினான் என்பதை சுட்டிக்காட்டுகிறார். இது மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை.சமுதாயம் எப்படி இருந்த்து ? மனு தர்மக் காலத்திலே இப்படி இருந்தது.இதை மாற்றியதுதான் திராவிடர் ஆட்சி.


மாற்றுவதற்கு அடித்தளம் இட்டது ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்.எப்படி எல்லாம் அடித்தளம் இட்டது என்பதையெல்லாம் கூட இந்த நூலிலே  ,சிறப்பான வகையிலே எடுத்து ,அந்த முன்னோட்ட்த்தையும் எடுத்து சொல்லிக்காட்டியிருக்கிறார்கள்.இந்த முன்னோட்டங்களை எடுத்துக்காட்டி,மற்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பெரியாரால்,சமூக மாற்றம் எப்படி வந்தது என்பதையெல்லாம் எடுத்துச்சொல்லி,ஒவ்வொன்றுக்கும் அடித்தளமாக இருக்கக்கூடிய செய்திகளை இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள்.ஒவ்வொரு வாய்ப்புக்கும் ,அதற்கு  அடித்தளம் எங்கே இருக்கிறது என்பதை இங்கே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.குறிப்பாக உங்களுக்குச்சொல்ல வேண்டுமானால் இந்தக் கல்வி என்பது 1952-லே எப்படி இருந்தது?.அதற்குப்பிறகு அது எப்படி வளர்ந்திருக்கிறது? என்று ஒரு 50 ஆண்டுகாலத்தை எடுத்து இருக்கிறார்கள்.முன்னாலே இருந்த வாய்ப்பு என்பதைப் பற்றியெல்லாம் சொல்கிறார்கள்.1951-லே படிப்பறிவு 21 சதவீதமாக இருந்தது,பிறகு தமிழ் நாட்டிலே திராவிட மாடல் என்பதற்காக ,2011-லே படிப்பறிவு  80 விழுக்காடு.60 ஆண்டுகளிலே 4 மடங்கு அதிகரித்திருக்கிறது..ஒரு கருத்தை,தந்தை பெரியார் அவர்களின் போராட்டமே கல்வியைத்தான் முன்னாலே வைத்தார்கள்.இட ஒதுக்கீடு,சமூக நீதி என்பது இருக்கிறதே ,இந்த இட ஒதுக்கீடு இருக்கிறதே அது சாதாரணமான செய்தி அல்ல.


சமூக நீதி என்ற வார்த்தையே கூட எப்போது வருகிறது என்றால் சமூக அநீதி எங்கு இருக்கிறதோ,எங்களுக்கு நீதி தேவை என்று சமூக அநீதியினாலே பாதிக்கப்பட்டவர்கள்,நீதி கேட்பவர்கள்தான் சமூக நீதி கேட்பவர்கள். நாங்கள் நீதி கேட்கிறோம்.எனவே இந்த 60 ஆண்டுகாலத்திலே 4 மடங்கு வளர்ச்சி.ஆனால் அதற்கு முன்னால் ,ஒரு நூறாண்டுகளுக்கு முன்னால் 1920களில் என்ன நிலைமை?.ஒரு சம்பவம் உங்களுக்குச்சொல்லிக்காட்டவேண்டும். இராஜகோபாலாச்சாரியார் 1938-ல் ஆட்சிக்கு வந்தபோது ,தந்தை பெரியார் ஒரு கேள்வி கேட்டார்.கிராமப்புறங்களிலே இருந்த 3500க்கு மேற்பட்ட பள்ளிகளை மூடினீர்களே,இது நியாயமா என்று கேட்டார்.கள்ளை ஒழிக்கிறோம் என்று சொல்லி,அதற்காகக் கல்வியை ஒழிக்கிறோம் என்று சொல்கிறீர்களே,இது நியாயமா என்று கேட்டார்.அப்போது 7 விழுக்காடுதான் படித்திருந்தார்கள்.,இன்றைய மாற்றத்தில் திராவிட இயக்கத்தின் சாதனை என்பது  இருக்கிறது,இந்த 50 ஆண்டுகள் காலத்திலே இது ஆறு மடங்கு.ஆனால் அன்றிலிருந்து யார் இங்கு ஆட்சியில் இருந்தாலும் அவர்களை எதிர்த்துப்போராடி ,கல்வியை ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய நிலையிலே கொண்டு வந்து ,முன்னோட்டம் கொண்டு வந்தது திராவிட இயக்கம்.அந்த முன்னோட்ட்த்தை எல்லாம் இந்த நூலிலே கொடுத்திருக்கிறார்கள்.ஆதாரமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.


 குலக்கல்வித் திட்டம் என்பது…1952-லே ஆச்சாரியார் அவர்கள் குலக்கல்வித்திட்டம் கொண்டுவந்து,அதற்குப் பெரிய போராட்டம் நடந்தது.தயவுசெய்து கண்ணை மூடிக்கொண்டு ,படித்த நண்பர்கள்,விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒன்றை யோசித்துப்பாருங்கள்.அந்தக் குலக்கல்வித்திட்டம் என்பது ,ஆரம்ப நிலைப்பள்ளிக்கூடங்களிலேயே அரை நேரம் படிக்கவேண்டும்,அரை நேரம் அப்பன் செய்யும் தொழிலைத்தான் பிள்ளை செய்யவேண்டும்  என்பது..உழுகிறவன் பிள்ளை உழுகவேண்டும்,வெளுக்கிறவன் பிள்ளை வெளுக்கவேண்டும்,..அப்படியே அவர் சொன்னார்.சிரைப்பவன் பிள்ளை சிரைக்கவேண்டும்,மலம்  எடுப்பவன்  பிள்ளை மலம் எடுக்கவேண்டும்,அதுதான் இந்தத் திட்டம் என்று சொல்லக்கூடிய நிலையிலே ,அது  இன்றைக்கு வேறு பெயரிலே  வருகிறது ..ஆபத்து இருக்கிறது என்று சொல்லக்கூடிய நிலையிலே,அன்றைக்கு அந்தக் குலக்கல்வித் திட்ட்த்தை ,கட்சி வேறுபாடு இல்லாமல் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி வந்தபிற்பாடு,அவருக்குத் துணையாக நின்று,அன்றைக்கு அந்தக் குலக்கல்வித்திட்ட்ம் ஒழிந்த காரணத்தால்தானே இன்றைக்கு இவ்வளவு பெரிய அஸ்திவாரம்.எனவேதான் மனுதர்மத்திற்கும் திராவிட்த்திற்குமான போராட்டம்.நான் சொன்னால் பிரச்சாரம் என்று யாரும் தவறாக  நினைத்துவிடக்கூடாது.ஆரிய திராவிடப்போராட்டம்.


ஆரியம் என்பது மனுதர்ம்ம்.இது வெறுப்பு அல்ல.இது ஓர் இனப்பார்வை அல்ல.தத்துவப்போராட்டங்கள்.இலட்சியங்கள் என்று வருகின்றபோது இருவேறு தத்துவங்கள்.’இன்னார்க்கு இதுதான்’,’ அது.அனைவர்க்கும் அனைத்தும்’.இது ஏற்கனவே இது உன் தலையெழுத்து. , பூர்வ ஜென்ம வினைப்பயன்.அதன் காரணமாகத்தான் … எனச்சொல்வது அந்த்தத்த்துவம்.”ஊளையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் “ இது இந்தத் தத்துவம்.ஆகவே அந்த அடிப்படையிலே வருகிறபோது ,மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி ,குலக்கல்வித்திட்டத்தை ஒழித்த பிற்பாடுதானே ஏராளமான பள்ளிக்கூடங்கள்.2-வது முறை ஆச்சாரியார் மூடியது 6500 பள்ளிக்கூடங்கள்.அதை எதிர்த்தப் போராட்டங்கள்.அதற்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் திறந்து,திறந்து,காமராசர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து ,தமிழ் நாட்டில் திராவிட மாடலுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கலாம்,ஆட்சியை இழக்கலாம்.ஆனால் கல்வி,உத்தியோகம்,மக்கள் நல்வாழ்வு  போன்றவை சமுதாய வாழ்வியல்.சமுதாயத்திற்கு முதலீடுகள்.அவைகள் சோசியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்.அதைத்தான் இந்த நூலிலே,மிகச்சிறப்பாக நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.சோசியல் இன்வெஸ்ட்மெண்ட்,கல்விக்காக எவ்வளவு செலவழித்தாலும் அது செலவா? என்றால் இல்லை.அது சமூகத்திற்கு வரவு. சமூகத்திற்கு முதலீடு.சமுதாயத்திலே இருக்கிற இளைஞர்களுக்கு நாம் எவ்வளவுக்கெவ்வளவு கல்வியைப் பரப்புகின்றோமோ,அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு வளரும்.அதன் மூலமாகத்தான் உண்மையான வளர்ச்சி Sustained Growth என்று சொல்லக்கூடிய தொடர்ச்சியான வளர்ச்சி இருக்கிறதே ,அது முக்கியமாக வளர்வதற்கு அடிக்கட்டுமானம் கல்விதான். சமூகத்திலே மூளை வளர்ச்சி,அறிவு வளர்ச்சி என்று இருக்கிறதே,அந்த அறிவு ‘அற்றங்காக்கும் கருவி ‘என்று சொல்லப்படுவது இருக்கிறதே ,அதைக் காண வழிகாட்டுவதுதானே கல்வி.ஆகவே அந்தக் கல்வியை எல்லா மக்களுக்கும் கிடைக்காமல் ,விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மட்டுமே உயர் ஜாதிக்கார்ர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது அவர்கள் ஏற்படுத்திய ஒரு  சூழல்,மீதி உழைப்பாளிகளாக இருக்க்க்கூடிய மக்களுக்கு கதவு திறந்து.மடை திறந்து விட்டது போல கல்வியைத் திறந்து விட்ட சூழல் எல்லாருக்கும் எல்லாமும் என்ற திராவிடச்சூழல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,.


 அனைவர்க்கும் அனைத்தும் என்று ஆனபிற்பாடுதான் சமூகத்திலே வளர்ச்சி ஏற்படுகிறது.வீக்கம் என்று இருந்த நிலை மாறி வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அழகாக ஏற்பாடுகள் வந்திருக்கின்றன என்பதைத் தெளிவாக ஆரம்பித்திலிருந்து சுட்டிக்காட்டி  வருகின்றபோது உயர்கல்வி விகிதம் 48 சதவீதம் என்று சொல்லுகிற அளவிற்கு வந்திருக்கிறது.மற்ற எல்லா இடங்களையும் விட அதிகம் என்று மிகச்சிறப்பான இட்த்திற்கு வந்திருக்கிறது.இன்றைக்கு பொறியியல் கல்வியாக இருந்தாலும்,மருத்துவக்கல்வியாக இருந்தாலும் ஏராளமான கல்விகள்,வாய்ப்புகள் வந்தன. இந்த வாய்ப்புகள்,காலங்காலமாக யாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு திராவிடன் மாடல் முன்னுரிமை கொடுத்தது.இந்த இட ஒதுக்கீடு என்றால் சில பேருக்கு அதுவும் ஒவ்வாமை.இட ஒதுக்கீடு என்றால் எதற்காக?  இட ஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறது?. “The Principle underlying social justice is nothing but supply on demand”. தேவை என்ன?.நாம் 100 பேருக்கு சமைக்கிறோம்.நூறு பேருக்கும் சமையல் இருக்கிறது,பந்தி சரியாகிவிடுகிறது என்றால் அங்கு போட்டியோ பிரித்துக்கொடுக்க வேண்டிய பிரச்சனையோ வராது.விமானத்தில்போகிறவர்கள் யாரும் அடித்துப்பிடித்து,இரயிலில் ஜன்னல் வழியாக இடம் பிடிப்பதுபோல இடம் பிடிப்பது இல்லை.ஆனால் நண்பர்களே ,அதே நேரத்திலே நீங்கள் நன்றாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்றால் இருப்பது குறைவு.தேவைப்படுகின்றவர்கள் அதிகம்.Supply is less,Demand is more. Supply and Demand தானே பொருளாதாரத்தில் மிக முக்கியமானது.


 

அப்படி வருகின்றபோது,அதை எடுத்துக்கொடுக்கவேண்டுமென்றால் யாருக்குக் கொடுக்கவேண்டும்? சமூக நீதி என்று ஒன்று உண்டு.இயற்கை நீதியுமுண்டு.Natural Justice என்பதும் உண்டு.Social Justice என்பதும் உண்டு.அந்த அடிப்படையில் வருகின்றபோது நண்பர்களே,மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி,Supply is less,Demand is more இப்ப யாருக்கு கொடுக்கணும்?யாரு அதிக பசி ஏப்பக்காரனோ ,அவனைப் பந்தியிலே உட்காரவைப்பதுதான் மனிதாபிமானம். Human approach.. மனித நேயம்.காலங்காலமாக பட்டினியில் இருக்கிறான்.அவனை முதலில் பந்தியில் உட்காரவையுங்கள்.ஏற்கனவே அஜீரணத்தால் இருப்பவனை,அவனைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.கொஞ்ச நாளைக்கு அவருக்கு உணவு கொடுக்காமல் இருந்தால் அவருக்கும் நல்லது.மற்றவர்களுக்கும் நல்லது.ஆகவே அப்படிப்பட்ட ஒரு அருமையான சூழலை உருவாக்குவதுதான் இட ஒதுக்கீடு.


எல்லோருக்கும் நிறைய இடங்கள் இருக்கிறது என்றால் இட ஒதுக்கீடே தேவைப்படாதே.இட ஒதுக்கீடு என்பதும் காலங்காலமாக  இருக்கவேண்டிய அவசியமும் இல்லையே.பேதம் இருப்பதாலும்,இடங்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தாலும்தான் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.யாருக்கு கொடுப்பது என்றால், காலங்காலமாக யார் வஞ்சிக்கப்பட்ட மக்களோ,யார் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களோ,அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்வது.அதுதான் “Democratising Education “..அதுதான் “Democratising Health “ .அதுதான் “Democratising Human Capital “.அதுதான் இந்த நூலிலே,மிகச்சிறப்பான வகையிலே பேராசிரியர் கலையரசன் அவர்களும்,அவருக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய பேராசிரியர் விஜய பாஸ்கர் அவர்களும் மிக அழகாக ,பாராட்டுக்குரிய நிலையிலே.செய்திருக்கிறார்கள்அப்படி வருகிறபோது கல்வி,அந்த வாய்ப்பு வருகிறது.

 


அருமை நண்பர்களே,அடுத்த பகுதி –மக்கள் நல்வாழ்வு.இன்றைய காலகட்டத்திலே பார்க்கவேண்டும். குஜராத் மாடல்,குஜராத் மாடல் என்று சொன்னார்கள்.அங்கே மூட நம்பிக்கை ஒரு பக்கம்.இங்கே மூட நம்பிக்கை ஒழிப்புப்பிரச்சாரம்,பகுத்தறிவுப்பிரச்சாரம் இருந்த காரணத்தால் யாரும் இங்கு போய் எருமை மாட்டுச்சாணத்தை எடுத்து உடம்பிலே பூசிக்கொண்டு அதன் மூலமாக கரோனா போய்விடும் என்று கருதக்கூடிய நிலைமை இங்கே வரவில்லை. ஆனால் குஜராத்திலே அது இருக்கிறது.மருத்துவர்கள் அதனை மறுத்துச்சொல்கிறார்கள்.பசுமாட்டு மூத்திரத்தைக் குடித்தால்,கோமியம் என்ற பெயரால் குடித்தால் கரோனா குணமாகிவிடும் என்று உத்திரபிரதேசம் போன்ற இடங்களில் செய்கின்றபோது,அறிவியல் அறிஞர்கள் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை,என்று சொல்கிறார்கள்.அந்தப் பணியை திராவிடர் இயக்கம் செய்த்து மட்டுமல்ல,திராவிடர் ஆட்சி அதற்கு எல்லாம் துணை போகாத அளவிற்கு  ஒரு பகுத்தறிவு ஆட்சியாக ,சிறப்பாக இருக்க்க்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கியது.அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்கப்பட்ட ஆட்சி என்று சொன்னார்கள்.அறிவுக்கு புறம்பான கருத்துகளையோ,மூட நம்பிக்கைகளை வலியுறுத்தக்கூடிய கருத்துகளையோ அவர்கள் செய்யவில்லை.பின்னாலே நழுவி,நழுவி மற்றவர்கள் நழுவியிருக்கலாம்,ஆனால் நண்பர்களே,சுகாதாரத்துறையிலே வரக்கூடிய வாய்ப்புகள் என்ன?,இந்த இட ஒதுக்கீட்டினால் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் மருத்துவம்.இந்த இட்த்திலே ஒன்றைச்சுட்டிக்காட்ட வேண்டும்.இது மிக முக்கியமானது.இந்த சுகாதாரத்துறையைப் பொறுத்த அளவிலே,நண்பர்களே,திராவிடர் இயக்கத்தின் பங்கு என்பது அன்று அடித்தளம் போட்டதால் ,இன்றைக்கு இவ்வளவு பெரிய வளர்ச்சி.இவ்வளவு கரோனா உச்சகட்டத்திலே இருக்கும்போதும் ,சமாளிக்க முடியும் என்ற  அளவிற்கு ,மக்களைக் காப்பாற்ற்க்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகள்,திராவிட இயக்க வளர்ச்சியினாலே ஏற்பட்டிருக்கிறது.இதனை யாரும் மறுக்கமுடியாது.

                                                                                                                                                                            (தொடரும்)




 

No comments: