Thursday 20 October 2022

திராவிடப்பொழில் (ஜீலை-செப்டம்பர் 2022) இதழின் ஆய்வுக்கூட்டம்....




பெரியார் பன்னாட்டு அமைப்பு ,தந்தை பெரியாரின் கொள்கைகளை ,தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலோடு உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றது.பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாக திராவிடப்பொழில் (ஜீலை-செப்டம்பர் 2022) இதழின் ஆய்வுக்கூட்டம் 22.10.2022 சனிக்கிழமை இந்திய நேரம் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.தோழர்.கோதை ஜெயராஜ் அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கின்றார். தமிழ் ஆய்வாளர்,தமிழ் உலகம் நன்றாக அறிந்த,மதிப்பிற்குரிய முனைவர் சுபாஷினி அவர்களின் கட்டுரையை அமெரிக்காவில் இருக்கும் எழுத்தாளர்,சிறந்த பேச்சாளர் தோழர்.ஜெயமாறன் அவர்கள் பேச இருக்கின்றார்.சொ.நே.அன்புமணி கல்வி பற்றிய எழுதிய கட்டுரையைப் பற்றி பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பேச இருக்கின்றார். இளைஞர்களைத் தட்டிக் கொடுத்துப் பாரட்டி,அவர்களைத் தன் அன்பாலும் அணுகுமுறையாலும் ஈர்ப்பதில் வல்லவர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.அவரின் உரையும் இருக்கிறது. திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் மானமிகு வீ.குமரேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றவும், ஏற்புரையை கட்டுரையாளர்கள் முனைவர் சுபாஷினி அவர்களும்,சொ.நே.அன்புமணியும் கொடுக்க இருக்கின்றார்கள். வாருங்கள் நண்பர்களே,தோழர்களே...உங்கள் வருகையால் நிகழ்வு இன்னும் சிறக்கட்டும்...

No comments: