Saturday 4 February 2023

சொட்டாங்கல் பற்றி வா.நேரு உரை ...


#சுமதி என்கிற #தமிழச்சி #தங்கப்பாண்டியன்,  #தென்சென்னைMP அவர்கள் எழுதிய "#சொட்டாங்கல்", என்ற நூல் விமர்சனம் ஒன்றை '#வாருங்கள் #படிப்போம்' என்ற #Whatsapp குழுவினரின் #Youtube காணொலியில் பார்த்தேன்.

காமதேனு இதழில் தமிழச்சி தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன. இந்த நூலில் தன் இளமைக்கால நினைவுகளை மனம் விட்டு பகிர்ந்து இருக்கிறார் தமிழச்சி.

இதில் இடம்பெற்ற இருபது கட்டுரைகளிலும் அவரது பால்யகால நினைவுகளையும் அந்தக் காலத்தில் அவருடன் பழகிய சிறு வயது தோழிகள், நண்பர்கள் பற்றியும் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒளிவண்ணன், Kumaran Kumar , Regina Chandra உள்ளிட்ட பலர் தாங்கள் இளமைக்காலத்தில் சென்னை நகரத்தில் இருந்தபோது ஏற்பட்ட பசுமையான அனுபவங்களை பச்சைக் குழந்தைகள் போல பேசிப்பேசி நெகிழ்ந்து போனார்கள். குறிப்பாக, நண்பர் #குழலூதும் #குமரன் அவர்கள் தன்னுடைய புளியமரம் தொடர்பான அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்து கொண்டார். அவர் புளிய மரத்துப் பேய்களை பார்த்து பழகி இருக்கிறாரா என்று அவரிடம் தனியாக அவருடைய காரில் போகும் போது நிச்சயம் கேட்பேன்.

தான் படித்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த "#ராமசாமி #வாத்தியார்" அவர்களை பேராசிரியர் நேரு மற்றும் வகுப்பு தோழர்கள் 'கண்ணாடி வாத்தியார்' என்றுதான் பெயரிட்டு அழைப்பார்கள் என்ற செய்தியைக்கூறி அது தொடர்பான பல நினைவலைகளில் மூழ்கி கரைந்து போனார் இந்த நூல் விமர்சனம் செய்த பேராசிரியர் #Neru!#தமிழ்நாட்ல இந்த #ராமசாமிகள் பற்றிப் பேசாமல் எந்த தலைப்பிலும் நீளமாக பேசி விட முடியாது.

சுமதி அவர்கள் மாணவியாக இருந்த போது அவருடைய தோழியாக இருந்த #நிறைமதி என்ற பெண்ணின் தொடர்புகளை தமிழச்சி ஒரு கட்டுரையில் பகிர்ந்து உள்ளார்.

#கொட்டாம்புளி என்ற வகுப்புத் தோழர் ஒரு புளியமரத்தின் மேலே ஏறி அமர்ந்து விளையாடுவார். அதே மாதிரி புளியங்கொட்டையை சூடு பண்ணி தன் எதிரிகள் தோலின் மீது வைத்து விளையாடுவார். பிற்காலத்தில் தமிழச்சி சொந்த ஊர் சென்றபோது அந்த கொட்டாம்புளி என்ற நண்பர் இவரை பார்க்க வந்தார். "ஏய் கொட்டாம்புளி!", என்று ஆர்வமுடன் அவரை கூவி அழைத்து விட்டு அதே வேளையில் அவர் தப்பாக நினைத்துக் கொள்வாரோ என்று தமிழச்சி தடுமாறியதையும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த பழைய கால நண்பர் மனம்விட்டு பேசியதையும் இந்த நூலில் வெளிப்படையாக அவர் எழுதி உள்ளார்.

அரிசியை வாயில் போட்டு வெல்லக்கட்டியையும் சேர்த்துப் போட்டு மென்று மகிழும் ஒரு தீப்பெட்டி ஒட்டும் சிறுமியைப் பற்றி பேசும்போது அந்த பெண்ணுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை நெஞ்சம் நெகிழப் பேசுகிறார் தமிழச்சி.

#காக்காபொன்னு, வத்திப்பெட்டியில் மூடி வைத்து விளையாடும் #சில்லுவண்டு பற்றிய செய்திகள் என்னுடைய அந்தக் கால நினைவுகளுக்கு இழுத்துச் சென்றன.

"ஏ சோகக் கதையைகா கேளு தாய்க்குலமே!", என்று #பாக்கியராஜ் பாடியது போல என் சொந்த அனுபவங்களை பின்னர் தனிக்கச்சேரி ஆக வைத்துக் கொள்கிறேன்.

இதற்கு மேலும் இந்த பதிவை நீட்டித்துக் கொண்டே போனால் நீங்கள் என்னை கோலெடுத்துக் கொண்டு அடிக்க வரலாம். ஆகவே, இந்த நிகழ்ச்சியை முழுவதும் பார்க்க விரும்பினால் யூடியூபில் Olivannan Gopalakrishnan என்ற பெயரை ஆங்கிலத்தில் உங்கள் அலைபேசியில் உள்ள விசைப்பலகை யில் தட்டினால் பல நூறு #யூடியூப் காணொலிகள் பொல பொல என்று பறந்து வந்து கொட்டும். 

அவைகளை தொடர்ந்து பார்த்தால் உங்கள் #அறிவு #வளரும்! பொது அறிவு, இலக்கிய உணர்வுகள் எழும்பிக் கூத்தாடும். புதிய மனிதர்கள் ஆவீர்கள்.

#பாருங்க #நண்பர்களே!

....

நன்றி  :  முக நூலில் திரு இரத்தினம் இராமசாமி

சொட்டாங்கல் பற்றி வா.நேரு உரை இணைப்பு 

https://youtu.be/lXiE8yQOoTI 

No comments: