Saturday 25 February 2023

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் விருது ...

 கவிக்கோ துரை.வசந்தராசன் வாசகர் வட்டம் சார்பாக ,சென்னையில் செந்தமிழ் அரிமா.சி.இலக்குவனார் விருது பெற்ற நேரம்.18.02.2023.திராவிடர் இயக்கத்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் அய்யா சுப.வீ.அவர்கள் விருதினை வழங்கினார்கள்.பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் நினைவு நூலினை வழங்கினார்கள்.சென்னை டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலைய மாடியில் நடந்த நிகழ்வு. கவிக்கோ துரை.வசந்த ராசன்,கவிஞர் வெற்றிப்பேரொளி,முனைவர் பேரா.ரேவதி,நக்கீரன் ஆருர் தமிழ் நாடான்,முனைவர் தமிழ் இயலான்,பாவலர் சீனி.பழனி உள்ளிட்ட நிறைய இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்த நிகழ்வு.அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரமும் ,அண்ணன் சுப.முருகானந்தம் அவர்களும் இந்தப் பேரவையில் துடிப்புமிக்க உறுப்பினர்கள் இந்த வாசகர் வட்டத்தில்.விருதினை வாங்கியவர்கள் சார்பாக நான் பேசியபோது 'விருதுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ' என்றேன். அய்யா சுப.வீ.அவர்கள் தனது சிறப்புரையில் " நேரு,விருதுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். நாமாக விருதுகளைத் தேடிப் போகவேண்டியதில்லை.அதுவாக நம்மைத் தேடி வரும்போது வேண்டாம் என்று சொல்லவேண்டியதும் இல்லை என்பதுதான் எனது கருத்து " என்றார்.சரியான கருத்தாகவே எனக்குத் தோன்றியது..பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் அண்ணன் இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் ,நிகழ்வுக்கு முன்னரே வந்து பொன்னாடை போர்த்தி,வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டுச்சென்றார்.வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று 







3 comments:

Anonymous said...

அருமை தோழர். மிகவும் மகிழ்ச்சி

Anonymous said...

ஓவியா

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்...