Thursday 17 October 2024

‘திராவிடம் வென்றது ‘ ... இராம.வைரமுத்து

அன்பு இளவல் வழக்கறிஞர் இராம.வைரமுத்து அவர்கள் தனது முதல் கவிதை நூலினை எனக்கு அளித்தார்.மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன்.அருகில் பகுத்தறிவு ஊடகப்பிரிவின் மாநிலத்தலைவர் அய்யா மா.அழகிரிசாமி மற்றும் திராவிடர் கழகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் அண்ணன் மதுரை வே.செல்வம் அவர்கள். 





அந்த நூலுக்கு நான் அளித்த வாழ்த்துரை கீழே..


முனைவர் வா.நேரு,

மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

பெரியார் திடல்சென்னை-7.

                     வாழ்த்துரை

திராவிடம் வென்றது ‘ என்னும் தலைப்பில் கவிதைத் திரட்டு நூலினை மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர் அருமை உடன்பிறப்பு வழக்கறிஞர் இராம.வைரமுத்து i அவர்கள் ஆக்கி நமக்குத் தந்துள்ளார்கள்.இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள்விடுதலை,விடுதலை ஞாயிறுமலர்,உண்மை,திராவிட வாசிப்பு,கருஞ்சட்டைத் தமிழர் போன்ற இதழ்களில் வெளிவந்தவைமுதலில் பல இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒன்றிணைத்து ஒரு நூலாக ஆக்கித் தந்தமைக்குக் கவிஞர் இராம.வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நினைவுக் கொடை என்னும் தலைப்பிட்டு கன்னித்தமிழையும் கவிதைத் திறனையும் எனக்கு அளித்த அறிவுப் பேராசான் அன்புத் தலைவர் கலைஞருக்கு”  என்று தான் இந்தக் கவிதை நூல் தொடங்குகிறது மண்டபத்திற்குள்ளே சில புலவர்கள் தங்களுக்குள் பாடிக்கொண்டிருந்த கவியரங்கங்களைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்குள்ளே கவியரங்கங்களைத் தலைமையேற்று நடத்திய பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.எள்ளலும் துள்ளலுமாய்,எதிரிகளைச் சுட்டிக்காட்டும் சிலேடைகளுமாய் இலக்கியச்சுவையைக் கற்பிக்கும் பாடசாலைகளாய் கவியரங்கங்களை மாற்றிய பெருமை கலைஞர் அவர்களுக்கு உண்டுஎனவே அவரின் நினைவுக்கொடையாக இந்த நூல் அமைந்திருப்பது மிக்கப் பொருத்தமானது.

இந்த நூலில் மொத்தம் 28 கவிதைகள் இருக்கின்றன திராவிட இயக்கம்  எழுத்தால், பேச்சால் அதன் விளைவாக எழுந்த எழுச்சியால்  வளர்ந்த இயக்கம். வாள் முனையை விடப் பேனாவின் முனை கூர்மையானது என்பதை உணர்ந்த இயக்கம்.அதனை இந்தியத் துணைக்கண்டத்திற்கே உணர்த்திய இயக்கம் அந்த வகையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், அன்பு உடன்பிறப்பு  ராம. வைரமுத்து அவர்கள் எழுதுவதில் ,பேசுவதில் தனித்தன்மையோடு விளங்கக் கூடியவர். படிப்பவர்,கேட்பவர் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்,பேசுபவர். அந்த வகையில் இவருடைய இந்த்த் ‘திராவிடம் வென்றது’ என்னும் கவிதைத் திரட்டும் எளிமையாகவும் எவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் “ அன்று நீங்கள் ஏந்திய /  அந்தச் சுயமரியாதைத் தீப்பந்தம்/

எங்கள் கைகளில் ன்று- அது / என்றும் ஒளிரும் வென்று!”

என்று தந்தை பெரியாருக்கு இளைஞர் பட்டாளத்தின் சார்பாகக் கவிதை வழியாக உறுதி மொழியை அளிக்கின்றார் சுயமரியாதை  இயக்கத்தின் நூற்றாண்டு மட்டும் அல்ல, கலைஞர் அவர்களின் நூற்றாண்றைக்  கூட  இப்போதுதான் கொண்டாடி முடித்திருக்கிறோம்.

 தாழ்த்தப்பட்டோருக்கு அஞ்சல் வந்தால்/ தர மாட்டார் அவர் வீட்டில்/

ஊர் ஓர் மரக்கிளையில் கட்டி வைப்பார் அன்று /

அந்தச் சமுதாயத்தின் தகத்தகாயச் சூரியனை /

அஞ்சல் துறைக்கு அமைச்சராக்கினார் கலைஞர் வென்று “

என்று மிகச் சிறப்பாகப் பழைய வரலாற்றையும் இன்றைய ஆளுமையையும் இணைத்துக் கவிதையாக்கி கைகளில் கொடுத்திருக்கிறார்  இந்த நூல் ஆசிரியர்.

சிங்காரச் சென்னையின் சிற்பிநீ / ஆரியத்திற்குத் தோல்வியை கற்பிஎன்று  மார்ச் 2022-ல் எழுதி இருக்கிறார்மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் 40க்கும் 40ம் தோற்று ஆரியம் அழுது கொண்டிருக்கும் இந்த வேளையில் மிகப்பொருத்தமான கவிதையாக இந்தக்கவிதை அமைந்திருக்கிறது.

 தாத்தா பேரை எடுக்கணும் தம்பி என /

தமிழ்நாடு வாழ்த்துது உன்னை நம்பி

என்று இன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் அன்புத்தம்பி மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பற்றிய  கவிதையை அளித்திருக்கிறார். பெரியார் வழி செல்வதனால் / பெருமை என்ன கிடைக்குமென/

கேட்டுக் கேலி  செய்த கூட்டத்திற்கு/ லகிலேயே சிறந்த மனிதநேயர்”/ விருது கிடைக்கும் என்று காட்டினார்/ தந்தை பெரியார் கொள்கைகளை/ரணி எங்கும்  நிலை நாட்டினார்”  என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் போற்றிப் பாராட்டி ஒரு கவிதையை இத்தொகுப்பில் கொடுத்துள்ளார்.

 இயன்றவை அனைத்தும்/ இடைவிடாது செய்து/

 இயங்குதலே வாழ்க்கை என நிலைநாட்டி /

கழகத்திற்கு வழிகாட்டி/ தமிழ்நாட்டிற்கு ஒளிகூட்டி/

நாங்கள் திராவிடக் கூட்டம் என மார் தட்டி/

கலங்கரை விளக்கமாய்/ அறிவாசன் அய்யா சுப.வீ”  என்று அய்யா சுப.வீ . அவர்களைக் கவிமாலையால் பாராட்டி மகிழ்கின்றார். அதைப்போலவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,பேரறிஞர் அண்ணா, வி.பி.சிங்,அலைக்கற்றை நாயகன் என மானமிகு அய்யா ஆ.இராசா என்று பல தலைவர்களைப் பற்றிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட கவிதைகள் இருக்கின்றன 2001 தேர்தல் 2004 தேர்தல் என்று பல தேர்தலில் பற்றிய கவிதைகள் இருக்கின்றன.

மொத்தத்தில் வரலாற்றைச்சொல்லும் கவிதைகளாகவும்,வரலாறு படைத்த திராவிட இயக்கத்துத் தலைவர்களைப் பற்றியும் திராவிட இயக்கத்தைப் பற்றியும் சொல்லும் கவிதைகளாக அனைத்துக் கவிதைகளும் இருப்பது சிறப்பு.

திராவிடம் வென்றது ‘ என்னும் கவிதைத் திரட்டு  நூலினைக் கொடுத்திருக்கும் அன்பு உடன்பிறப்பு இராம.வைரமுத்து அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்நமது தோழர்கள் இந்தக் கவிதை நூலினை வாங்கிப் படிக்கவேண்டும்பரப்ப வேண்டும்ஏனெனில் இது முழுக்க முழுக்கத் திராவிடத்தின் வெற்றியைச்சொல்லும் கவிதைத் தொகுப்பு,

தன்னுடைய முதல் கவிதை நூலினை வெளியிடும் கவிஞர் இராம.வைரமுத்து அவர்கள் இன்னும் இதனைப் போலப் பல கவிதை நூல்களை வெளியிடவேண்டும்.அதனைத் தமிழ் உலகம் வாங்கிப் படித்துப் பயன்பெறவேண்டும்.வாழ்த்துகளுடன்.

மதுரை                               தோழமையுடன்

25.08.2024 …                               வா.நேரு

 

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிக்கிறேன் ஐயா

வா.நேரு said...

மிக்க மகிழ்ச்சிங்க அய்யா..நன்றி.

Rama Vairamuthu said...

தாங்கள் தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி அய்யா

Rama Vairamuthu said...

நன்றி அய்யா

முனைவர். வா.நேரு said...

@Rama Vairamuthu மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்கள்.எழுத்தில் உங்களுக்கு நல்ல ஆற்றல் உள்ளது.