Tuesday 18 June 2013

மாநில ப.க. தலைவர் முனைவர் வா.நேருவின் தாயார் நினைவாக

சாப்டூரில் முத்துகிருஷ்ணம்மாள் பெயரில் படிப்பகம் அமைக்கவேண்டும்


படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை
மதுரை, ஜூன் 17-  மதுரை மாவட் டம் சாப்டூரைச் சேர்ந்த நினைவில் வாழும் திரு. க.வாலகுரு (ஆசிரியர்) அவர்களின் துணவியாரும், பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களின் தாயா ருமான திருமதி சு.முத்துக் கிருஷ்ணம் மாள் (தலைமை ஆசிரியர், பணி நிறைவு) அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு  16.06.2013 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள மாயத்(தேவர்) திருமண மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பகுத்தறிவாளர் கழ கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன்  தலைமையேற்றார். படத் தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் திறந்து வைத்தார். பொன்னாடை அணிவித்து பாராட்டு!
17 ஆண்டுகள் திருமதி சு.முத்துக் கிருஷ்ணம்மாளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமிகு டாக்டர் வி.என். இராஜசேகரன் அவர்களுக்கும், வா. நேருவின் தலைமை ஆசிரியராக சாப் டூரில் இருந்தவரும், அவரைப்போன்ற பல மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பம் வரக்காரணமாக இருந்து கற்பித்தவருமான ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வி.வீரி செட்டி அவர்களுக்கும் தமிழர் தலை வர் அவர்கள் பொன்னாடை அணி வித்து பாராட்டினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, வா. நேருவின் தாய்மாமா புலவர் தங்கமுத்துராசா (தலைமை ஆசிரியர் ஓய்வு, அறந்தாங்கி), தொலைத்தொடர்பு தொ.மு.ச. சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் அ.செல்லப்பாண்டியன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வடசேரி வ.இளங் கோவன், அமைப்புச்செயலாளர் பேரா.பூ.சி.இளங்கோவன், தொலைத் தொடர்பு தொ.மு.ச. சங்கத்தின்  அகில இந்தியத் துணைத் தலைவர் டி.மகேஸ் வரி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.கும ரேசன்  ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். மருத்துவர் சோம.இளங்கோவனின் இரங்கல் செய்தி
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன்
அவர்கள் முக நூலில் அனுப்பிய இரங்கல் செய்தியை பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் சுப.முரு கானந்தம் வாசித்தார். தொடர்ந்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். தமது உரையில், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா. நேருவும், பொதுச்செயலாளர் வீ.கும ரேசனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள், பகுத்தறி வாளர் கழகப் பணியாற்றக் கூடியவர் கள்.  வா. நேருவின் உறவினர் தங்க முத்து ராசா இளமைக்காலத்தில் கிராமத்தில் இருந்த கூட்டுக் குடும்ப முறை பற்றியும், பகிர்தலைப் பற்றியும் குறிப்பிட்டார். ஒரு சிறிய கிராமமான சாப்டூரில் பிறந்து, ஆசிரியராகப் பணியாற்றி, மிகக்குறைந்த வயதில் கணவரை இழந்தபோதும் தனது 5 குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, தம்பிகள் படிப்பதற்கும் மிகச் சிறந்த ஊக்கச் சக்தியாக இருந்தது ஆச்சரியமளிக்கிறது.   இன்றைக்கும் கூட சதிமாதா எனச்சொல்லி இராஜஸ் தான் போன்ற இடங்களில், கணவன் இறந்தவுடன் அவர்களைத் தீயில் தள்ளி கொல்லும் அவலம் இருக்கிறது; ஆனால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார். மற்ற மதங்களில் விதவைகள் உண்டு; ஆனால் அர்த்தமுள்ள இந்து மதம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தில்தான் விதவைத் தன்மை என்பது உண்டு, விதவைகள் என்பதற் காக பல்வேறு வகைகளில் அவர்களை அவமானப்படுத்தும் தன்மை உண்டு.
திருமணம் போன்ற நிகழ்வுகளில் அவர்களை ஒதுக்கிவைத்து மனதைப் புண்படுத்தும் தன்மை உண்டு. நேரு வின் துணைவியார் நே.சொர்ணம் பல்வேறு வகையில் அவருக்கு உறு துணையாக இருந்தார். நேரு, தன்னுடைய தாயாரின் நினை வாக சாப்டூரில் அவரது பெயரிலேயே படிப்பகத்தை உருவாக்கவேண்டும். அதற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிட்டு உரையாற்றினார். வா. நேரு நன்றியுரையாற்றினார்.  திருமதி மோகனா  அம்மையார், திரா விடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன் ராசா, சிவகங்கை வழக்கறிஞர் ச.இன்ப லாதன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் புதுச்சேரி மு. ந. நடராசன், விருதுநகர் க. நல்ல தம்பி, தர்மபுரி ஊமை.ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை  க.அறிவொளி, விருதுநகர் தி.ஆதவன், நெல்லை சு.நயினார், திருமாவளவன்,  எழுத்தாளர் க.சி.அகமுடைநம்பி, சாப் டூர் சு.கோபாலகிருஷ்ணன், சு.இராதா கிருஷ்ணன், துணைக் கல்வி அதிகாரி சு.பாலகிருஷ்ணன், ஆசிரியர் வா.சாரதா, தொலைத்தொடர்பு தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் எஸ்.கருப்பையா, சூரியன், சவுந்தர், விஜயரெங்கன், ந.முருகன், அன்பழகன், மு.சங்கையா, செந்தில்குமார் உள்ளிட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்கள், தொழிற்சங்கப் பொறுப் பாளர்கள், சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் பங்கேற்ற நிகழ்வாக இந்த நினைவேந்தல் நிகழ்வு அமைந்தது. திராவிடர் கழகத்தின் மதுரை மண்டலத் தலைவர் வே.செல்வம் நிகழ்ச்சியையும், நிகழ்ச்சிக்கான முன் னேற்பாடுகளையும், தோழர்களையும்  ஒருங்கிணைத்தார்.

நன்றி;விடுதலை 17/06/2013 8ம் பக்கம்

No comments: