Friday 4 June 2021

அடிமனதின் சொல்லால்......

அவர் இறந்து 

ஒரு மாதம் கழித்துத்தான்

இறந்த செய்தியே தெரிகிறது...




எப்போதும் முகத்தில்

மெலிதாய் ஒரு புன்னகை!

தோளில் கைபோட்டுப்

பழகும் நண்பன் போல

ஊழியர்களிடம் பழகும் பாங்கு..


அவருக்கு கீழே 

வேலை பார்த்தபொழுது

அதிகாரியாய் நான்

பார்த்ததில்லை என்றும்..

எங்களிடம் தன் அதிகாரத்தை 

என்றும் காட்டியதுமில்லை....


நிறைய வேலை செய்திருக்கிறேன்

அவருக்குக் கீழ்...

என்னங்க எவ்வளவு 

வேலை கொடுத்தாலும்

செய்து விட்டு 

அடுத்த வேலை என்னென்ன

கேட்கிற ஆளா இருக்கிறீங்க

என்றார் ஒரு நாள்...


வேலை செய்வதிலும்

வேலை செய்ய வைப்பதிலும்

அப்படி ஓர் ஆனந்தம்

அவருக்கு....


உங்கள் நண்பர்ன்னு

நம்பி வேலையைக் 

கொடுத்துப்போட்டு

அப்பப்பா...வேலையை 

முடிச்சுக்கொடுக்க

வைக்கிறதுக்குள்ள 

படாத பாடு பட்டுப்போனேன்

போங்க...அவரை 

உங்க நண்பர்ன்னு 

நான் சொல்ல மாட்டேன் 

என்றார் ஒரு நாள்...


ஆவேசமாய் கத்திய

ஊழியர் ஒருவரிடம்

'என்னங்க உங்களுக்கு 

எனக்கும் 

வாய்க்காத் தகராறா!

வரப்புத் தகராறா!

என்ன பிரச்சனைன்னு 

சொல்லுங்க...

தீர்க்க முயற்ச்சிப்போம்"

என்று ஆரம்பித்த அவரின்

அன்றைய உரையாடல்

என்றும் நினைக்கும்போதே

புன்னகைக்க வைக்கும்..


ஏதேனும் தேவை என்றால்

எழுதி உடனே 

வாங்கித் தந்திடுவார்...

நன்றாய் வேலை பார்க்கும்

ஊழியருக்கு 

பதக்கம் வாங்கிக் கொடுக்க

பல முறை எழுதிடுவார்..

அவர் எழுதி நல் ஊழியர்

பதக்கம் பெற்றோர் பலர்...


சொல்லில் சுத்தம்

பணியில் 'கை 'சுத்தம்

எல்லோர் மனதிலும்

பதிந்து விட்ட 

எங்கள் மேல்அதிகாரி

ஈஸ்வரமூர்த்தி 

கரோனாவில் கறைந்துவிட்டார்

எனும் செய்தி 

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது..

அப்பேர்ப்பட்ட மனிதருக்கு

ஓர் அஞ்சலி கூட 

நேரில் செலுத்த இயலவில்லை

என்பது பெருந்துயரமாகத்தான்

இருக்கிறது...

சடங்குத்தனமான 'ஆழந்த இரங்கல்' அல்ல...

அடிமனதின் சொல்லால்

ஆழந்த இரங்கலும் வருத்தமும்...

                     வா.நேரு...04.06.2021 

(மதுரை பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் பணியாற்றிய திரு.எஸ்.ஈஸ்வரமூர்த்தி(AGM Rtd) அவர்கள் மறைந்தார் என்னும் செய்திகேட்டு)




No comments: