Wednesday 1 December 2021

உனை அறிந்ததால்....

       

கொரனாவில் இருந்து

மீண்டு எழுந்து மீண்டும்

இளைஞர் போல்

பீடு நடை போடுகிறாய்!

இராணுவத் தளதியாய் 

எங்களுக்கு ஆணைகள் இடுகிறாய்...!


புதிது புதிதாய்

வியூகங்களை வகுக்கிறாய்!

இன்று புதிதாய்ப் பிறந்தவர்போல

இளம் இரத்தம் போல

எதிரிகளைச்சந்திக்கிறாய் !

அவர்களின் சவால்களை

செயல்களால் எதிர்கொள்கிறாய் !


நான் பிறந்து 

89 ஆண்டுகள் ஆனதாக

நீங்கள் சொல்கிறீர்கள்....

நான் என்றும்

என் எண்ணத்தில்...

வேகத்தில்...

செயலில்...

இருபதுதான் என்று 

சொல்லி சிரிக்கிறாய்....

80களில் இருக்கும் 

உங்களோடு ஈடுகொடுத்து

நடக்க இயலா

ஐம்பதுகள் ஆமாம்,ஆமாம்

என ஒத்துக்கொண்டு

வாய்விட்டுச் சிரிக்கின்றனர்...


எதிரிகளைக் களத்தில்

சந்திக்க தொடர்ச்சியாய்

நூல்களைக் கொடுக்கிறாய்!

நூலாம்படையாய் நம் 

இனத்தைச் சுற்றி அழிக்கும்

'பூநூல்'களை அழிக்க

நூலே துணை என

எங்களுக்குப் போதிக்கிறாய்!


உனை அறிந்ததால்

தந்தை பெரியாரை 

நாங்கள் அறிந்தோம்...

அவரின் மண்டைச்சுரப்புக் 

கொள்கைகளை அறிந்தோம்...


உனை அறிந்ததால்

வாழ்வின் துன்பங்களை

எதிர்கொண்டு அழிக்கும்

வளமான வாழ்வியல்

சிந்தனைகள் அறிந்தோம்...


உனை அறிந்ததால்

'கீதையின் மறுபக்கம்' அறிந்தோம்...

'வெறுக்கத்தக்கதே பிராமணியம்'

என்பதை நாங்கள் உணர்ந்தோம்

மற்றவருக்கும் உணர்த்திடத் துணிந்தோம்.


எத்தனை எத்தனை நூல்கள்!

நூலைப் படி! நூலைப் படி!

திராவிடர் கழக நூலைப்படி!

எனப் படிப்படியாய் 

பரம்பரை எதிரிகளை

வெற்றி கொள்ளும் 

நுட்பம் நாளும் கற்பிக்கிறாய்!


தந்தை பெரியாரின்

தனித்துவ மிகு கொள்கைகளை

தரணியெங்கும் கொண்டு செல்ல

அல்லும் பகலும் உழைக்கும்

எங்கள் அய்யாவே! ஆசிரியரே!

தமிழர் தலைவர் கி.வீரமணியே!




நன்றியோடும் மகிழ்ச்சியோடும்

நாங்கள் சொல்லி மகிழ்கின்றோம்

உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

89-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து!

வாழ்க! வாழ்க! வாழ்கவே!

நூறாண்டும் கடந்தும் 

நீங்கள் வாழ்க!வாழ்க! வாழ்கவே!


                         வா.நேரு,02.12.2021


 


No comments: