Sunday, 6 April 2025

முனைவர் க. சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" — நூல் திறனாய்வு: முனைவர் வா. நேரு

தமிழர் புலப்பெயர்வு என்னும் இந்த நூல் தமிழ் மரபு அறக் கட்டளையின் இயக்குனர் கா சுபாஷினி அவர்களால் எழுதப்பட்ட ஓர் அருமையான நூல் . ஓர் ஆராய்ச்சி நூல். எப்படி எல்லாம் தமிழர்கள் காலம் காலமாக புலம் பெயர்ந்தார்கள், எதற்காகப் புலம்பெயர்ந்தார்கள்,ஏன் புலம்பெயர்ந்தார்கள் புலம்பெயர்கிற அவர்கள் என்னென்ன இன்னல்களை சந்தித்தார்கள் அல்லது என்னென்ன ஏற்றங்களைச் சந்தித்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நமக்கு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிற ஓர் அருமையான நூலாக இந்தத் தமிழர் புலப்பெயர்வு என்கின்ற நூல் உலகளாவிய பயணங்கள்- குடியேற்றங்கள்- வரலாறு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையின் கிளைகள்  இந்தியா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ளது.

இந்தப் புத்தகத்தினுடைய முதல் பதிப்பு ஜனவரி 2024 ஆம் ஆண்டு வந்திருக்கிறது மிகக் குறுகிய காலத்திலே ஆறு மாதத்திலேயே இரண்டாவது திப்பு ஜூன் 2024-லேயே வந்திருக்கிறது. 374 பக்கங்கள் விலை ரூபாய் 450 ரூபாய். இந்த நூல் காணிக்கை என்று சொல்லி தன் உடலில் காயங்களையும் மனதில் வலிகளையும் சுமந்து இன்றைய நம் பெருமைகளுக்கு வழி வகுத்துத் தந்த அவர்களுக்கு என்று கொடுத்திருக்கிறார். அந்த அவர்கள் என்பவர்கள் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும் உலகின் பல நாடுகளுக்கும் தீவுகளுக்கும் புதிய வாழ்க்கையைத் தேடிப் பயணம் செய்த தமிழ்ப் பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என்று அவர் கொடுத்திருக்கிறார்.

இந்த நூலுக்கு மிகச் சிறப்பாக வாழ்த்துரையினை தமிழ்நாட்டினுடைய மாண்புமிகு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நாயகர் அய்யா மு.க,ஸ்டாலின் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல வாழ்த்துரையினை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும் இலங்கையினுடைய அமைச்சர் மாண்புமிகு திரு செந்தில் தொண்டைமான் அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். ஓர்  அருமையான அணிந்துரையை, அணிந்துரையே ஓர் ஆய்வுச்சுருக்கம் போல இருக்கிறது. அதனை ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் திரு ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல பதிப்புரையை நிறைய நூல்களைப் படைத்திருக்கக்கூடிய ஆய்வறிஞர் முனைவர் தேமொழி அவர்கள் கொடுத்திருக்கிறார். முன்னுரையாக தன்உரையை இந்த நூலினுடைய ஆசிரியர் முனைவர் கா சுபாஷினி அவர்கள் கொடுத்திருக்கிறார்.

 

நூல்களில் இரண்டு வகையான நூல்கள் இருக்கின்றன. ஒன்று சில நூல்களை மேலோட்டமாக ஒரே மூச்சிலே படித்து முடிக்கக் கூடிய  நூல்கள். இன்னொரு வகை  நாம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து சுவைக்க வேண்டிய நூல்கள்.பாதுகாத்து வைக்க வேண்டிய நூல்கள். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பெல்லாம்  இரண்டாவது வகை. அந்த வகையில் இந்த ‘தமிழர் புலப்பெயர்வு இரண்டாவது வகையாக இருக்கக்கூடிய ஒரு  நூலாக  இருக்கிறது ஒரே மூச்சிலே படித்துவிட்டு தூக்கிப் போடக்கூடிய ஒரு  நூலாக  இல்லாமல் நாம் பாதுகாக்க வேண்டிய, பல நேரங்களில் நாம் ரெஃபரன்ஸ்  நூல் என்று சொல்வோமே அதைப்போல நமக்கு பயன்படக்கூடிய ஒரு  நூலாக இந்தத்  தமிழர் புலப்பெயர்வு என்ற  நூல்  இருக்கிறது.

ந்த நூலில்  மொத்தம் 10 அத்தியாயங்கள் இருக்கின்றன.இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி ஒரு 50  நிமிடம் உரையாற்றி இருக்கின்றேன்.வாய்ப்பு இருக்கும்போது கேட்டுப்பாருங்கள். நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஸ்ரீதேவி(வாருங்கள் படிப்போம் குழு) தன்னுடைய கருத்தாக “மிக அருமையான புத்தகத் திறனாய்வு.புத்தகம் வாங்கிப் பல நாட்கள் வாங்கிவிட்டது.எல்லா அத்தியாயங்களையும் அதனுள் இருக்கும் தலைப்புகளின் வரிசையையும் அதனுள் சொல்லப்பட்ட கருத்துகளையும் மிக விரைவாகவும் சுருக்கமாகவும் கூறி,அதனோடு தொடர்புடைய மற்ற புத்தகங்களையும் உங்கள் அனுபங்களையும் கூறி புத்தகத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுத்தி விட்டீர்கள்.

எப்படி மிக அதிகமான தகவல்களை உடைய புத்தகத்தை திறனாய்வு செய்யலாம் ? என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது இன்றைய திறனாய்வு .மிக்க நன்றி அய்யா” என்று குறிப்பிட்டிருந்தார்.  நன்றி அவருக்கு.

 

முனைவர் க. சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" 
— நூல் திறனாய்வு: முனைவர் வா. நேரு

https://youtu.be/nf89_fyPJyU




No comments: