நான் ஏன்
நாத்திகன் ஆனேன்..
தோழர் பகத்சிங்-சின்
ஒப்புதல் வாக்குமூலம்
ஆண்டுகள் பல கடந்தபின்பும்
பசுமரத்தாணி போல் நிற்கிறது..
கோயில்கள் போரடித்துவிட்டன..
சமாதிகளைத் தேடி மக்கள்
கூட்டம் கூட்டமாகச் சென்று
வழிபாடு நடத்த புதிய புதிய
ஊடகங்கள் வழிவகுக்கின்றன?..
உழைக்கும் மக்கள் ‘கடவுள் எனும்
மாயை ‘ நோக்கி ஓடும்
விட்டில் பூச்சிகளாய்
ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்…
இத்தனை அறிவியல்
கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும்
கடவுள் மட்டும் இன்னும்
ஏன் சாகாமல் இருக்கிறார் ?
என்னும் கேள்விக்கு விடை
தோழர் பகத்சிங்-கின்
புத்தகத்திற்குள் இருக்கிறது….
மனிதத்தைத் தேடும்
மானுடர்களுக்கெல்லாம்
நாத்திகம் ஒன்றே
விடையாய் நிற்கிறது…
தோழர் பக்த்சிங்-கும்
அவரது தோழர்களும்
வீரவணக்கம் அடைந்த
இந்த நாளில் …
தோழரின் புத்தகத்தை
வாசிப்பதன் வழியாக
அவரின் வினாக்களுக்குள்..
விடைகளுக்குள் மூழ்கி
வீரவணக்கம் செலுத்துகிறேன் நான் !
வா.நேரு,
23.03.2026

No comments:
Post a Comment