கொடிய நோய் எந்த நோய்?...
இருக்கும் நோய்களில்
கொடிய நோய்
எந்த நோய்…?
நம் முன் இக்கேள்வி
எழுப்பப்பட்டால்
நம் ஒவ்வொருவர் மனதிலும்
ஒவ்வொரு நோயின்
பெயர் வரும்..
கொத்து கொத்தாய்
மனிதர்களைக் கொன்ற
நோய்கள் பிளேக்..காலரா…
கொரனா எனப்பெயர் வரும்..
அந்த நோயைத் தீர்க்க
தங்கள் உயிரைப்
பயணம் வைத்து
மருந்துகள் கண்ட
அறிஞர்கள் நினைவில் வருவர்…
இருக்கும் நோய்களில்
கொடிய நோய்
மூடநம்பிக்கை எனும் நோய்..
என்றாரே தந்தை பெரியார்…
விரித்துப் பார்க்கின்
இந்நோயால் செத்தார்..
சிதைந்தார் பெயரெல்லாம்
நினைவுகளில் வரும்…
மூட நம்பிக்கை
தீர்க்கும் மருந்தையும்
ஊர் ஊராய்ச்
சென்று சரிபடுத்தும்
வழி சொன்ன மருத்துவரும்
அவரின்றி வேறு யார் ?
வா.நேரு, 10.07.26
நன்றி : பெரியார் மருந்தியல் கல்லூரி தொகுத்த
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ நூல்..
No comments:
Post a Comment