Monday 17 May 2021

பயமுறுத்தப் பழகுவோம்...

கரோனாவின் 

முதல் அலை முழுக்க

முகக்கவசம் அணிய

மறுத்தவர் அவர்....


இயல்பாக இருக்கும்

எதிர்ப்புச்சக்தி

எல்லா வைரசையும்

அழித்துவிடும் விடுங்கள்

என்றார்......

 நான் அன்று

முகக்கவசம் அணியச்

சொன்ன போது....


இரட்டை முகக்கவசம்

அணிந்திருந்தார் இப்போது...

ஏன் இந்த மாற்றம் என்றேன்...

சுற்றி நிகழும் இறப்புகளும்

இடுகாட்டில் வரிசையில்

காத்திருந்து எரிக்க 

நேரிடும் கொடுமையும்

பயமுறுத்துகிறது....என்றார்...


அளவு கடந்த அலட்சியமும்

அதே நேரத்தில் 

அளவு கடந்த பயமும் ஒன்றுதான்...

இரண்டும் எதிர்

விளைவுகளைத்தான் தரும்....


நம்மைச்சுற்றிப் பலர்...

நண்பர்கள் தோழர்கள்

எனப்பலர் சாகின்றனர்

உண்மைதான்...மறுக்கவில்லை...

நம் இதயத்தைப் பிழியும் 

இறப்புகள் பல

நமது துன்பத்தைக் கூட்டுகின்றன,,,,

ஆனாலும் இதனை நினைத்து

அஞ்சி நடுங்கினால்

ஆபத்து நீங்காது...கூடும்..


அறிகுறிகள் தென்பட்டும்

தெரிவிக்கப் பயந்து

திணறிப் பயந்து ஒளிந்து

பின்பு முற்றியபின்பு

முறையிடும் மனிதர்கள்

பலர் மாட்டிக்கொள்கின்றனர்

கொடும் கரானாவிற்கு...


அச்சமின்றி இருப்பதும்

தடூப்பூசி போடுவதும்

கரோனா அறிகுறிகள் 

ஏதும் தென்பட்டால்

உடனடி மருத்துவமும்தான்

இன்றைய தேவை....

அச்சம் அல்ல,,,,

பயத்தை நாம் 

பயமுறுத்தப் பழகுவோம்...


                     வா.நேரு, 17.05.2021    




No comments: