Saturday 19 March 2022

நிகழ்வும் நினைப்பும்...முனைவர் நா.நளினிதேவி அவர்களிடம் 'சங்கப் பலகை'

 வல்லினச்சிறகுகள் மின் இதழில் நூல் மதிப்புரைகளை 'சங்கப்பலகை ' என்னும் தலைப்பில் எழுத வாய்ப்புக் கிடைத்தது.18 நூல்களைப் பற்றி எழுதினேன்.அந்த மதிப்புரைகளைத் தொகுத்து தோழர் அகன் என்னும் அமிர்தகணேசன் அவர்களின் முயற்சியால் 'சங்கப் பலகை 'என்னும் தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. பெரும்பாலும் அந்த நூல் மதிப்புரை எழுத அடித்தளமாக இருந்த நூல்களின் ஆசிரியர்களுக்கு இந்த சங்கப்பலகை என்னும் நூலை அஞ்சல் மூலமாகவோ நேரிலோ கொடுத்து வருகின்றேன்.

அந்த நூல் மதிப்புரை நூல்களில் ஒன்று 'புற நானூறு தமிழரின் பேரிலக்கியம் ' என்னும் நூல் பற்றியது.அந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா.நளினிதேவி அவர்கள் மதுரை தெற்குவாசல் பகுதியில் இருக்கிறார்.உறவினர் ஒருவர் வீட்டிற்கு அந்தப் பக்கம் சென்ற நிலையில்,நானும் என் மகளும் சென்று ,முனைவர் நா.நளினிதேவி அவர்களை நேரில் சந்தித்து 'சங்கப்பலகை ' நூலைக் கொடுத்தோம்.மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.அவரின் சகோதரர்,சகோதரரின் இணையர் எனக் கொஞ்ச நேரம் உரையாடல் உற்சாகமாக அமைந்தது. முனைவர் நா.நளினிதேவி அவர்கள் அளித்த 'ஆண் ஆத்தி சூடி 'நூலைப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.








No comments: