இந்த நாள்..இந்த நாள்
இத்தனை ஆண்டுகள் எனது
உழைப்பிற்குப் பின்பும்
உங்களையெல்லாம்
‘சூத்திரர்களாக’ விட்டுச்
செல்கின்றேனே எனப்
பெரும்கருணையோடு நம்மைப்
பார்த்து அவர் கடைசியாகப்
பேசிய நாள்!
உள்ளத்தின் உண்ர்வுக்குமுன்
உடல் என்ன செய்யும்?
நோய் என்ன செய்யும் என்று
உலகிற்கு எடுத்துக்காட்டிய நாள்!
தந்தை பெரியாரின்
இறுதிப்பேருரையைப்
படித்திருக்கிறீர்களா நண்பர்களே!
இணையத்தில் கிடைக்கிறது..
சிறுவெளியீடாய் இருக்கிறது..
எடுத்துப் படிக்கும் நாள்
இதுவெனப் படியுங்கள் நண்பர்களே!
பார்ப்பனியம் ஆட்சிக்கட்டிலில்
அமர்ந்துகொண்டு அழிச்சாட்டும்
செய்யும் இந்த நாளில்
கடவுள்களின் பெயரால் நடக்கும்
கயமைகளை எண்ணிடவே…
‘ஆடுகளு’ம் மாடுகளும் நாங்கள்
நல்ல நாய்கள் என வாலைக்
குழைத்துப் பார்ப்பனியத்திற்கு
துணைபோகும் இந்த நாளில்
ஏன் நமக்கு இந்த இழிநிலை
என்பதை உணர அவரின்
இறுதி முழுக்கத்தைக் கேளுங்கள்!
அவரின் இறுதிப் பேருரையைப்
படியுங்கள்!
எள்ளலும் துள்ள்ளுமாய்
அவரின் பேச்சு!
இடையிடையே
உடல் நோயினால் வரும்
‘அம்மா’ ‘அம்மா’
என
வரும் சத்தம்…அடுத்த
சில நிமிடங்களில் ஆரியத்திற்கு
எதிராய் சம்மட்டியாய்
அவர் எடுத்து அடிக்கும் அடி!
இன்றைக்கும் அவர் பெயரைக் கேட்டால்
ஆரியம் அலறும் அலறலுக்கு
விடையெல்லாம் இந்த உரையில்..
எது தீர்வு என்பதைத் தெளிவாய்ச்
சொல்லும் ‘மரணசாசனத்தை’
அய்யாவின் இறுதிப்பேருரையைப்
படியுங்கள்! பரப்புங்கள் நண்பர்களே…
வா.நேரு,
19.12.2025

No comments:
Post a Comment