Thursday, 9 April 2026

ஆற்றில் பாலைக் கொட்டும் அறிவிலிகாள்!...

 

              ஆற்றில் பாலைக் கொட்டும் அறிவிலிகாள்!...

 

பட்டினியால் பசித்து

அழும் குழந்தைகள்

பல கோடி இருக்கும் நாட்டில்

நம்பிக்கை எனும் பெயரில்

இப்படி பல்லாயிரம் லிட்டர்

பாலை ஆற்றுக்குள் ஊற்றி

இருக்கிறீர்களே நியாயமாடா இது/

 

கடவுள் என்று ஒருவர்

இருந்தால் இப்படி

பாழாக்கும் பாலைப் பார்த்து

சும்மா இருப்பாராடா?

நீங்கள் சொல்லும் கதைபோல

சுளீர் எனச் சாட்டையால்

எடுத்து அடிக்க மாட்டாராடா?

 

ஆற்றில் கொட்டிய பாலை

ஒரு பாத்திரத்தில் பிடித்த

குழந்தையைத் திட்டி

அவசரம் அவசரமாய்

ஆற்றுக்குள் ஊற்றிய கொடுமையை

சில நாட்களுக்கு முன்னால்

ஊடகங்களில் பார்த்தோம்…

 

ஏன் இப்படி ஆற்றுக்குள்

ஊற்றுபவர்கள்  நாம்

ஏந்தும் பாத்திரத்தில்

ஊற்ற மறுக்கிறார்கள் எனப்

பசித்திருக்கும் அக்குழந்தைகள்

பரக்க பரக்க முழித்த

நிலையைப் பார்த்தோம்…

 

சடங்குகளால் வாழும்

மூன்று சதவீத்ம் மீண்டும்

மீண்டும் சடங்குகளைப்

புதுப்பிக்க புதுப்புதுக் கதைகளைப்

புனைந்து பரப்புகிறது…

 

கொடுக்கும் கட்டளையை

செயற்கை நுண்ணறிவு

சில நொடிகளில்

முடித்துக்கொடுக்கிறது!

 

ஆற்றில் பாலைக்

கொட்டும் அறிவிலிகளின்

மூளைக்குள் சென்று

ஏதேனும் செய்ய இயலுமோ

செயற்கை நுண்ணறிவால்?

                             வா.நேரு,09.04.2026

(செய்தி : மத்தியப்பிரதேசத்தில் 11000 ஆயிரம் லிட்டர் பாலை ஆற்றில் ஊற்றி வழிபாடு)

 

No comments: