கரப்பான் பூச்சி
ஜனதா பார்ட்டி(கஜேபி)
X பக்கம் முடக்கம்…
பயந்துபோன ஒன்றிய
அரசு வேர்த்து விறுவிறுத்து
முடக்கச்சொல்லி வேண்டல்..…
ஒன்றிய அரசு ஆட்களுக்கு
படபடப்பு வந்திருக்குமோ?
வங்கதேசம், இலங்கை என
ஜென்சி இளைஞர்கள்
வீதிகளில் இறங்கிப் போராடி
ஊழல் அரசுகளைப் பந்தாடி
நாட்டை விட்டு ஓட்டியது
நினைவுக்கு வந்திருக்குமோ?
மதத்தால் மக்களை
மோதவிட்டு..
இரத்தம் குடித்து
கட்சி வளர்க்கும்…
வித்தைகள் புரிந்துவிடுமோ
எனும் புரிதல் வந்திருக்குமோ?
வருடத்திற்கு இரண்டு கோடி
இளைஞர்களுக்கு வேலை
தருவோம் என்றோம்…..
வங்கிக் கணக்கில்
பதினைந்து இலட்சம்
வந்து விழும் என்றோம்....
ஊழலை ஒழிப்போம் என்றோம்
நீட் ஊழல் நாடெங்கும்
நாறுகிறது..
ஊழலில் ஊறிக்கிடக்கிறது நாடு..
உல்லாச இளைஞராய்
உலகம் சுற்றி வருகிறார் ஒருவர்…
இளைஞர்கள் இதையெல்லாம்
கரப்பான் பூச்சி பக்கங்களில்
விலாவாரியாப் பேசுகிறார்கள்..
இந்தியாவுக்கு ஏன் இந்த நிலை
என வேகத்தோடு கேட்கிறார்கள்..
அவர்களின் கோரிக்கையெல்லாம்
பிஜேபி ஆட்சியின் அடிமடியில்
கைவைக்கும் கோரிக்கைகள்...
ஒன்றிணைந்து விடுவார்களோ..
தலைநகர் தில்லியில்
இலட்சக்கணக்கில் குவிந்து
விடுவார்களோ என அஞ்சி
அடக்குமுறையை ஏவுகிறது
மத்திய ஒன்றிய அரசு…
தன் வினைத் தன்னைச்சுடும்..
ஊடகப்பொய்களால்
அரியணையில் ஏறிய
பிஜேபி அஞ்சி நடுங்குகிறது..
நடுக்கம் தொடரட்டும்..
கஜேபி முழக்கம்
நாடு முழுக்க ஒலிக்கட்டும்
!.
வா.நேரு,
21.05.2026
.
No comments:
Post a Comment