Friday 1 January 2021

எழுத நினைக்கும் என் தோழரே..

       

எழுது...எழுது..

எழுத‌ எழுத..

எழுத்து வரும்..

எழுது..எழுது...


ஆகச் சிறந்த 

கதைகளைத்

தேடித் தேடிப்படி..


கதைகளை அவர்கள்

நகர்த்தியிருக்கும்

உத்திகளைக் கண்டுபிடி..


நமது உள்மனதில்

புகுந்து எப்படி

கதைகளால் நம்மை

அழ வைக்கிறார்கள்

என்பதைக் கண்டுபிடி.....


தனிமையில் நம்

மனதை உருட்டும்

எழுத்தின் வலிமையைக் கண்டுபிடி.....


இணையமும் 

கணினியும் இல்லாக்

காலத்திலும்

பல்லாயிரம் பக்கங்கள் அவர்களை எழுத 

வைத்தது எது 

என்பதைக் கண்டுபிடி...





புகழ் வரும்..

பணம் வரும்..

என்பதற்காக 

எழுதியவர்கள்

நிலைக்கவில்லை.....


நிலைத்து நிற்கும்

எழுத்தாய்‌ நான்

எழுத முயல்வேன் என

ஓரிடத்தில் அமர்ந்து

மனதை

ஒருமுகப்படித்தி..


எழுது...எழுது...

எழுத நினைக்கும்

என் தோழரே..

எழுது...எழுது..

                  வா.நேரு..

                  01.01.2021

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு...

முனைவர். வா.நேரு said...

நன்றி தனபாலன் சார்,வருகைக்கும் கருத்திற்கும்...