Sunday 9 May 2021

துணை நிற்போம் வாரீர் ! வாரீர்!

கூனிக்குறுகி நெளிந்து

குனிந்து தவழ்ந்து

காலில் விழுந்து எழுந்து

பதவிகள் பெற்று

மாநிலத்தின் உரிமையை 

எல்லாம் 

மத்திய அரசுக்கு 

அஞ்சி நடுங்கி 

அடகுவைத்த 

கொடுமையைக்  கண்டோம் 

சில ஆண்டுகளாய்...


இருளை அகற்றப் பிறந்த

சூரிய ஒளியாய்

கைவிரல்களில் வைத்த மையால்

புதிய ஆட்சி உதித்தது...


திறமை மிகு

அதிகாரிகள்

தலைமைப் பதவிகளில்..


நேர்மை மிகு 

அதிகாரிகள்

உயர் பதவிகளில்


உள்ளம் இனிக்கிறது

உவகை பிறக்கிறது

திராவிடத்தின் வெற்றி

திசையெங்கும் ஒலிக்கிறது....


ஓட்டுக்கு பணமா?

ஊகும்....கிடையாது

தொடர்ச்சியாய் 

இருமுறை வெற்றி...

தொகுதிக்கு ஒதுக்கும் பணத்தின்

வரவு செலவுத்திட்டம்

எங்கும் இல்லை இப்படி...

வட நாட்டுப் பத்திரிக்கை

எல்லாம் வியந்து பார்த்த

சட்டமன்ற உறுப்ப்பினர் அவர்...


உலகம் சுற்றிவந்த

பொருளாதார நிபுணர்

உண்மையை எங்கும்

சொல்லஞ்சா மனிதநேயர் அவர்...

எதையும் எதிர்பார

பெருமை மிகு 

குடும்பத்தின் வாரிசு...

இந்த ஆட்சியின் நிதியமைச்சர்...


மெத்தப்படித்தவர்கள்...

மேன்மைமிகு குணமுடையோர்

களப்பணியால் பெருமைபெற்றோர்

கற்றறிந்த சான்றோர் 

அடங்கிய அமைச்சரவை ....

கொடுமையான கரோனாவை

எதிர்கொள்ள

ஏற்றமிகு படையாய்

இணைந்து நிற்கும்

அதிகாரிகளும் அமைச்சர்களும்....

அறிவியலும்

மனிதநேயமும் இணைந்த

அறிவிப்புகள் 

வருகிறது நாள்தோறும்...


"எல்லார்க்கும் எல்லாம்"

திராவிட இயக்கம்

நோக்கம் நோக்கி 

இணைந்து நடப்போம்

வாருங்கள் என அழைக்கிறார்

நம் முதல்வர் ஸ்டாலின்...

வாருங்கள் இணைவோம்...

வளமிக்க தமிழ் நாட்டை 

அமைக்க அவருக்கு

துணை நிற்போம் வாரீர் ! வாரீர்!


                          வா.நேரு...09.05.2021



1 comment:

முனைவர். வா.நேரு said...

தமிழக முதல்வர் தளபதி அவர்களின் நிதி அமைச்சர் தேர்வு பாராட்டுக்குரியது! மகிழ்ச்சி அளிக்கிறது! சிறந்த பண்பாளர் சட்ட மன்ற முன்மாதிரி அரசியல் தலைவர்! பொருளாதாரம் மனிதவள மேம்பாட்டு கல்வியில் தேர்ந்த ஆற்றல் வாய்ந்த சிந்தனையாளர்!
புதிய நிதியமைச்சரால் மதுரை மத்திய தொகுதி மட்டுமல்ல தமிழகமே பெருமை கொள்கிறது. அவர்களது பணி சிறக்க அனைவரும் துணை நிற்போம்! திராவிடம் வென்றது! வீறு நடை போடும்!!
முக நூலில் அண்ணன் அ.செல்லப்பாண்டி அவர்கள்.