Wednesday 12 May 2021

மாட்டுக்கும் கீழாய் ஆக்காதீர்

காற்றில் நஞ்சினை

உமிழும் நாகமாய்

நாட்டில் கரோனாத்

தொற்று நடமாட்டம்...


ஒன்றாம் அலை 

இரண்டாம் அலையென

அலை அலையாய்

மனித உயிர்களை

அள்ளிச்செல்கிறது.கரோனா


திகைத்து நிற்கிறது தேசம்...

அறிவியல் வழியாய்

தீர்வுகளை முன்வைக்கும்

அறிஞர்களின் சொல்படி 

நடக்க நாடு முனைகிறது.....


ஆனால் ..என்ன சொல்ல?

விஞ்ஞானிகளுக்கு

எதிராக அஞ்ஞானிகள்

அணிவகுத்து நிற்கிறார்கள்....


அரசியலில் நஞ்சினைக்

கலப்பது போல

மதத்தினைக் கலந்தவர்கள்...

அறிவியல் வழிமுறைக்கு

எதிராகவும் மதத்தினைக்

கலக்குகிறார்கள்....


மாட்டுச்சாணத்தை 

உடலில் பூசு....

மாட்டுக் கோமியத்தை

மடக்கு மடக்கு என்று குடி....

பூசிய மாட்டுச்சாணத்தை நீக்க

பசுவின் பாலை ஊத்திக்குளி...

கரோனாவை விரட்டிட

இது குஜராத் மாடல்...



பார்ப்பனர்கள் வேதம் ஓத

பதினோரு லிட்டர் பாலை

சிவலிங்கத்தின்மேல் ஊற்றி

அருகம்புல்லை அரைத்துஅதன்

ஐந்து லிட்டர் நீரையும் ஊற்றி

சிவனுக்குப் பூசை செய்து பின்

மாடுகளுக்கு உணவு அளித்து...

கரோனாவை விரட்டிட

இது உ.பி.,மாடல்


உ.பி.மாடலைச்செய்தவர் 

மடத்து அதிபதி என்றால்

அது அவர் விருப்பம் ..

மூட நம்பிக்கை நிகழ்வு

எனச்சுட்டி விட்டுவிடலாம் ...

ஆனால்...செய்தவர் 

மாநிலத்து முதலமைச்சர்.

அனைத்து மக்களுக்குமான

முதலமைச்சராய் உ.பி.யில்

அமர்ந்திருக்கும் சாமியாரின் 

செயல் இது சரிதானா? சிந்திப்பீர்...


கோயிலோ..மசூதியோ...

சர்ச்சோ....

வழிபாட்டுத்தலம் எதுவும்

கரோனா தடுப்புக்கு

வழிகாட்டப்போவதில்லை...


அறிவியல் வழிமுறையாய்

தடுப்பு மருந்துகள்.....

நோய் வந்துவிட்டால் நம்

உயிர்க்காக்கும் மருந்துகள்

என மருத்துவர்கள் 

சொல்வதை மட்டும் கேட்போம்....


நாட்டு மக்களுக்கு 

நன்மை செய நினைத்தால்

மருத்துவக் கட்டமைப்பை

கூட்டுங்கள்..அதற்காக

கூடுதல் நிதி ஒதுக்குங்கள்..

மாடுகள்கூட உண்ணமறுக்கும்

மாட்டுக் கழிவுகளை

உண்ணச்சொல்லி 

மனிதர்களை மாட்டுக்கும்

கீழாய் ஆக்காதீர்....

மத ஆட்சியாளர்களே...


                    வா.நேரு 12.05.2021

1 comment:

முனைவர். வா.நேரு said...

தெளிவான கருத்துக்கள்!
மதவாத மூடர்களின் பிடியில் சிக்கி, நாடு சின்னாபின்னமாகி சீரழிந்து கொண்டிருக்கிறது! நாம் கொடிய கொரோனாவை எதிர்த்தும் இந்த மூடர்களை எதிர்த்தும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது! இதற்கிடையில் அப்பாவி மக்கள்தான் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறாரகள்! உறுதியுடன் எதிர்த்துப் போராடுவோம்! மீண்டுவருவோம்

அண்ணன் அ.செல்லப்பாண்டியன் அவர்கள் முக நூலில்