Thursday 9 June 2022

திராவிடப்பொழில் ஏப்ரல்-ஜீன் 2022 இதழ் ஆய்வு

 பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக திராவிடப்பொழில் ஏப்ரல்-ஜீன் 2022 இதழ் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. திராவிடப்பொழில் இதழின் சிறப்பு ஆசிரியர்  திருமிகு முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் அறிமுக உரை ஆற்ற இருக்கிறார்.உலகம் அறிந்த நற்றமிழ் அறிஞர் இவர். உலகம் முழுவதும் இருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடு தொடர்பில் இருப்பவர்.'அறியப்படாத தமிழ் மொழி' போன்ற மிக அரிய புத்தகங்களை ,எதார்த்தமான நடையில் எழுதிப் புகழ் பெற்றவர்.பன்மொழி அறிந்த தமிழ்ப் பேராசிரியர்.




இந்த நிகழ்வில் ஆய்வு உரையினை தோழர் ஜெயாமாறன் அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார். எடுத்துக்கொண்ட தலைப்பை,மிகத்தெளிவாகவும் அதில் இருக்கும் உட்கருத்துகளை கேட்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறுவதில் வல்லவர்.இவரால் நம் நூல் அல்லது கட்டுரை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று படைப்பவர்கள் நினைக்கும் அளவுக்கு தனித்திறன் மிக்கவர். 

அதனைப்போல இளைஞர்,ஆங்கிலத்தில் வல்லமையும் எடுத்துக்கூறுவதில் தனித்தன்மையும் உள்ள அமரன் அவர்களும் ஆய்வு உரை நிகழ்த்த இருக்கின்றார்.தோழர் சுதாகர் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க இருக்கின்றார்.நன்றியுரையை தோழர் ரவிக்குமார் அவர்கள் நிகழ்த்துகிறார்.


திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர்.பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர்,எந்த நாளும் பெரியாரியலையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கருதி தன்னலம் கருதாமல் உழைக்கும்  அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.எல்லா விளக்குகளும் எரிவதற்கு இணைப்பாக இருக்கும் மின்சாரம் போலத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,இந்த நிகழ்வுக்கு தோழர் இளமாறன் அவர்கள் சிறப்பாக நடைபெறத்  துணை நிற்கிறார். அதைப்போல பெருமதிப்பிற்குரிய தோழர் அருள் அவர்கள்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு.துரைக்கண்ணு துரைஎழில்விழியன் அவர்கள்,இணைப்பு உரைகளை தனித்தன்மையாகத் தருகின்ற இளையதோழர் அறிவுப்பொன்னி அவர்கள்,திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர் குழுவில் உள்ள முன்னாள் துணைவேந்தர் அய்யா பேரா.ஜெகதீசன் அவர்கள், பேரா.அய்யா பேரா.ப.காளிமுத்து அவர்கள்,சிங்கப்பூர் அய்யா பேரா.சுப.திண்ணப்பன் அவர்கள்,பேரா.நம்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். திராவிடப்பொழில் இதழுக்கு கட்டுரை அளித்த கட்டுரை ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.11.06.2022 சனிக்கிழமை இரவு 7.30க்கு தொடங்கி 9.00 மணிக்குள் நிகழ்வு நிறைவுறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழகப்பேராசிரியர்களே,இருபால்ஆய்வு மாணவர்களே,தோழர்களே,தமிழ் அறிஞர்களே,திராவிட இயக்கப் பற்றாளர்களே,கலந்து கொள்ளுங்கள்.,கலந்து கொள்ளுங்கள்.


                 வா.நேரு,09.06.2022

No comments: