Tuesday 14 June 2022

நிகழ்வும் நினைப்பும் : தினமணி நாளிதழில் ஆழினி நாவல் விமர்சனம்

https://www.dinamani.com/specials/nool-aragam/2022/jun/13/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-3861252.html 




நிகழ்வும் நினைப்பும் : தினமணி நாளிதழில் ஆழினி நூல் விமர்சனம்

நேற்று (13.06.2022) காலையில் நகைச்சுவைத்தென்றல்,பட்டிமன்றப்பேச்சாளர்,பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்,செல்பேசியில் அழைத்தார். அவர் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச்சென்று அண்மையில் திரும்ப தமிழ் நாட்டிற்கு வந்திருந்தார். அவரிடம் செய்தித்தாட்களில் நீங்கள் அமெரிக்கா சென்று வந்ததைப்  பார்த்தேன்,மிக்க மகிழ்ச்சிங்க அய்யா என்றேன். அமெரிக்கப் பயணம் பற்றி என்னிடம் பேசிவிட்டு ,'இன்றைய தினமணி நாளிதழ் பார்த்தீர்களா? என்றார்.' ,இல்லைங்க அய்யா' என்றேன்.உங்கள் மகள் அறிவுமதி எழுதிய ஆழினி நாவல் பற்றி நூல் அரங்கம் பகுதியில் மிக அருமையாக வந்துள்ளது. வாழ்த்துகள்.வாங்கிப் பாருங்கள் என்றார்.அவர் அந்த நூலுக்கு அற்புதமான ஓர் அணிந்துரை அளித்து,இளம் எழுத்தாளர் சொ.நே.அறிவுமதியை ஊக்கப்படுத்தியவர்.'மகிழ்ச்சி,பார்க்கிறேங்க அய்யா,மிக்க நன்றி ' எனச்சொல்லிவிட்டு கடைக்குச்சென்று தினமணி நாளிதழை வாங்கி வந்து பார்த்தேன்.மிக நன்றாகவே நூல் மதிப்புரை எழுதியிருந்தார்கள்.நூல் மதிப்புரை இணைப்பு அருகில்...தினமணி நாளிதழுக்கு மனமார்ந்த நன்றி.

என்னோடு வேலைபார்த்த துணைக்கோட்ட அதிகாரி ஜெயக்குமார் அவர்கள் என்னிடம் செல்பேசியில் அழைத்து ஆழினி நாவல் ஒரு பிரதி வேண்டும் என்றார்,தினமணி பத்திரிக்கையில் பார்த்தேன். நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. படிக்க வேண்டும் என்றார்.மாலையில் அவரது மகள் சிந்துஜா அவர்களின் ஹோமியோபதி மருத்துவமனையில் ஜெயக்குமார் அவர்களிடம் இந்தப்புத்தகத்தை கொடுத்து வந்தேன். வாருங்கள் படிப்போம் உறுப்பினர் வழக்கறிஞர் சித்ராதேவி வேலுச்சாமி அவர்கள்,ஏற்கனவே ஆழினி நாவலை வாங்கி வைத்திருந்தார்.இந்த நூல் அரங்கம் பகுதி விமர்சனத்தைப் பார்த்தவுடன் ,படிக்க ஆரம்பித்துவிட்டேன்,65 பக்கங்கள் படித்து விட்டேன் அண்ணா  என்று பகிர்ந்திருந்தார்.


No comments: