Tuesday 5 July 2022

எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்

எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022

விதிமுறைகள்:
¤ சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
¤ எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.
¤ சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31, 2022.
¤ வெற்றி பெற்ற சிறுகதைகளுக்குத் தந்தை பெரியார் பிறந்தநாளான 2022 செப்டம்பர் 17 அன்று பரிசு வழங்கப்படும்.
¤ யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.
¤ எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புனை பெயர் பயன்படுத்துவோரின் உண்மைப் பெயர் வெளியிடப்படாது.
¤ கதையைத் தட்டச்சு செய்து அஞ்சல் மூலமும் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைகளை அனுப்பவும்.
¤ கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.
¤ தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தால் அச்சு வடிவிலும், கிண்டிலிலும் வெளியிடப்படும்.
¤ கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே! தொகுப்புப் புத்தகத்தின் காப்புரிமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தைச் சேர்ந்தது.
நிபந்தனைகள்:
¤ கதைகள் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி-மத ஒழிப்பு, பெண்ணுரிமை, முற்போக்குக் கருத்துடையனவாக இருக்கவேண்டும்.
¤ சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
¤ புதிதாக எழுதப்பட்ட கதைகள் எனில், இதுவரை எங்கும் (இணையதளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.
¤ 2021, 2022ஆம் ஆண்டில் ஏதேனும் இதழில் வெளியான சிறுகதை என்றால், எந்த இதழில், எப்போது வெளியானது என்று குறிப்பிட்டு சிறுகதை வெளிவந்த இதழின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
¤ கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ, போட்டியை நடத்துபவர்களுடனோ எவ்விதத்திலும் கடிதப் போக்குவரத்தோ, தொலை-பேசித் தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.
¤ நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசுகள்:
முதல் பரிசு: 5000
இரண்டாம் பரிசு: 3000
மூன்றாம் பரிசு: 2000
பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிற கதைகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 பரிசளிக்கப்படும்.
“எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி-2022” என்று தலைப்பிட்டு கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: rationalistwriters@gmail.com
அஞ்சல் முகவரி:
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

No comments: