Thursday 22 February 2024

நிகழ்வும் நினைப்பும் -2024 (3) 'பிரார்த்தனை மோசடி '





பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வாரந்தோறும் நூல் அறிமுகம் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8 மணிவரை நடக்கிறது.தவிர்க்க முடியாத சில வாரங்களில் வியாழக்கிழமை. திராவிட இயக்க கொள்கைகள் பேசும் நூல்கள்தான் பெரும்பாலும் இந்த இணையவழிக் கூட்டத்தில் பேசப்படுகின்றன.இன்று(23.02.2024)  திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'பிரார்த்தனை மோசடி ' என்னும் நூலைப் பற்றிப் பேச இருக்கிறேன். மும்பை திராவிடர் கழகத்தைச்சார்ந்த அய்யா மும்பை கணேசன் அவர்க்ள் இன்று (23.02.2024) காலையில் மும்பையிலிருந்து  செல்பேசியில் அழைத்தார். 'பிரார்த்தனை மோசடி ' என்னும் புத்தகத்தைப் பற்றிப் பேசப்போகிறீர்களா? என்றார்.ஆமாம் என்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத  நூல் இது என்று சொல்லிவிட்டு நூலில் இருக்கும் பல்வேறு செய்திகளை,பெயர்கள் உள்ளிட்டவைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.இந்த நூலைப் பற்றி அப்படி ஒரு உற்சாகத்துடன் ,மகிழ்ச்சியுடன் பேசினார். .உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு நூல் இவ்வளவு தூரம் ஒரு தொண்டரின் வாழ்க்கையில்,நினைவில் ஊடுருவ முடியாமா? என்று.ஆமாம் அப்படிப்பட்ட ஒரு நூலைப் பற்றிப்பேசும் ஒரு வாய்ப்பு எனக்கு இன்றைக்கு .கேட்பது உங்களுக்கும் கூட  ஒரு வாய்ப்பாக அமையலாம். வாருங்கள் மாலை 6.30 க்கு 


 

No comments: