Wednesday, 17 December 2025

உளமாற வாழ்த்துகிறேன்…

 

              

எப்போதும் நண்பர்கள்

புடைசூழ..

நகைச்சுவைகள் தெறிக்க..

போடா,வாடா எனும்

உரிமைச்சொற்கள் ஒலிக்க

நடைப்பயணம் செய்வார்

அதிகாலை…




 

நல்லதோ கெட்டதோ

உறவும் நட்பும்

எப்போதும் உரிமையாய்

அழைக்கும் செல்பேசி

இவரின் செல்பேசி…

அழைத்த குரலுக்கு

ஓடோடி வந்து உதவும்

கரங்களுக்குச் சொந்தக்காரர்…

 

கற்பதற்கு என்ன வயது?

எனக் கங்கணம் கட்டி

மரபுக் கவிதை கற்று

சொல் புதிதாய் பெரியாரின்

கருத்தைச் சொல்லும்

மரபுக் கவிதைகளை

யாத்துத் தருகிறார் நாளும் !

 

வாராது வந்த மாமணியாம்

ஆசிரியரின் ‘வாழ்வியலை’

வெண்பாவில் வடித்தார்…

அதனால் உலகெங்கும்

வாழும் தமிழர்கள் மனதில்

இடம் பிடித்தார்!...

 

‘இடும்பைக்கு இடும்பை’

கொடுக்கும் மனதுக்காரர்…

எத்தனை இடர்கள் வரினும்

அதனை எட்டி உதைத்து

முன்னேறும் மனசுக்காரர்..

அடடே! அகவை அறுபத்துஐந்தைத்

தொட்டதே இந்த நாள்!

நூறாவது பிறந்த நாளை

உவகையுடன் கொண்டாட

உளமாற வாழ்த்துகிறேன்

எங்கள் பகுத்தறிவு எழுத்தாளர்

மன்ற மாநிலச்செயலாளர்

அண்ணன் சுப.முருகானந்தத்தை..

நீங்கள் எட்டும் உயரம்

இன்னும் நிறைய இருக்கிறது..

அதைக் கண்டு கைதட்டி

மகிழும் நாளும் இருக்கிறது…

இந்நாள் போல் எந்நாளும்

வாழ்க!வாழ்க! மகிழ்வுடன்…

 

                             அன்புடன்

                              வா.நேரு, 18.12.2025

 

 

 

 

2 comments:

Anonymous said...

தங்களைப் போன்றோரின் பேரன்பால் இந்நிலை பெற்றேன்... இனியும்... நன்றி அண்ணே!

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சிங்க அண்ணே