Monday 12 April 2021

வெறுப்பை உமிழச்சொல்வதே.....

 சதுரகிரி மலைஅடிவாரம்

சாரல் சாரலாய்

மனிதர்கள் ஆன்மிகம்

தேடி வரும் இடம்...

அவ்விடத்தில் பிறந்த நான்

பெரியாரின் மனிதத்தால்

ஈர்க்கப்பட்டேன்

ஈர்க்கப்பட்ட பின்தான்

எனக்குத் தெரிந்தது

பெரியாரின் மானுடமே

நாத்திகம் என்று.....


உடன்பிறந்த அண்ணன்

சதுரகிரி மலைக்கு

அமாவாசை தோறும்

மலை ஏறிக்கொண்டிருக்கிறார்...

எனக்கு என்னமோ

இளம் வயது முதலே

பெரியார் திடலே 

பிடித்துப்போயிற்று....


சடங்குகளை மறுத்து

சாதிகளை வெறுத்து

மனிதம் மட்டுமே

மனிதர்களின் அடையாளமாய்

மண்ணில் வாழச்செய்யும்

பெரியாரியல் இரத்தத்தில்

ஊறிப்போயிற்று,,


விலங்குகளிடம் அற்புதமாய்

பழகும் நான் அறிந்தோர்

ஏன் இப்படி மனிதர்களிடம்

தள்ளி நிற்கிறார்கள் 

எனும் கேள்வி எனக்குள்

நெடு நாளாய் நின்றது...


உயரத்தில் பிடித்து அவள்

தண்ணீரை ஊற்ற

இருகை நிரப்பி 

பாப்பாத்தி ஒருவரிடம்

தண்ணீர் குடித்த கதையை

என் தாயார் 

என் இளமையில் சொல்லக் கேட்ட 

எனக்கு 

அண்ணல் அம்பேத்கர்

சொன்ன ஏணிப்படி சாதி அமைப்பு

எளிதில் புரிந்து போயிற்று...


தனக்குக் கீழ்ப்படியில்

இருக்கும் மனிதர்களிடம்

வெறுப்பை உமிழச்சொல்வதே

சாதி அமைப்பு...

அதுவேதான்

இந்து மதம் சொல்லும்

சனாதன அமைப்பு என்னும்

உண்மை புரிந்து போயிற்று...


அண்ணலும் அய்யாவும் ஒன்றுதான்

சாதி ஒழிப்பே மானுட விடுதலை

சாதி ஒழிப்பே மண்ணின் விடுதலை

சாதி ஒழிப்பே சமத்துவம் காட்டும் பாதை...

                                 வா.நேரு    

                                 12.04.2021

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்