Wednesday 21 April 2021

நொடிப்பொழுது தப்பியிருந்தாலும்



இதுதான் வீரம்..

இதுதான் அறிவு..

இதுதான் மனிதம்..


நொடிப்பொழுது தப்பியிருந்தாலும்

நொறுங்கியிருக்கக்கூடும்

விழுந்த குழந்தையோடு

இவரின் உடலும்

சுக்கு நூறாக 

உடைந்திருக்கக் கூடும்..


கதறும் தாயின் குரலும்

கண்டு பிடிக்க இயலா

அவள் நிலையும்

கணப்பொழுதில் அவளுக்கு

கண் தெரியவில்லை

என்பதனை இவருக்கு 

உணர்த்தியிருக்கக் கூடும்...


என்ன வேகம்...

என்ன விரைவு...

என்ன துணிவு...

இன்று நீ 

உலகம் முழுவதும்

அறியப்பட்டிருக்கிறாய்....


உன்னோடு வேலை பார்க்கும்

அனைவரும்

ஒன்றாய் நின்று 

கைதட்டி வரவேற்ற அந்த நேரம்!

நாங்களும் கூட அந்த வரிசையி'ல்

நின்று வரவேற்க வேண்டுமென

எங்கள் மனம்....


என்ன மொழி பேசுவாய் நீ!

எங்களுக்குத் தெரியவில்லை...

உனைப்பற்றிய அதிக விவரங்கள்.

நாங்கள் அறியவில்லை...

மகத்தான செயலால்

மனிதர்கள் அனைவர்

உள்ளத்திலும் நிறைந்திருக்கிறாய்.....

உன்னதமான உன் செயலால்

உலகம் முழுவதும்

உன் புகழ் பரவியிருக்கிறது....


அரசாங்க ஊழியர்கள் மேல்

அடுக்கடுக்காய்ப் பழி விழும் 

இந்த நாளில்

எடுத்துக்காட்டாய்ப் பாய்ந்து

தன்னுயிர் மறந்து 

பச்சிளம் பாலகனின்

உயிரைக் காப்பாற்றியிருக்கிறாய்...


மும்பையின் வாங்கனி

ரயில் நிலையத்தில் 

திசை காட்டும் ஊழியராய்

பணியாற்றும்  மயூர் செல்கியே!

உன் புகழ் ஓங்கட்டும்!

உன் குடும்பம் உன்னோடு இணைந்து

நன்றாக வாழட்டும் !



              வா.நேரு, 21.04.2021

              (17.04.2021 சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு அடிப்படையில் எழுதியது)

 

மயூர் செல்கி குழந்தையைக் காப்பாற்றும் காணொளி.....நன்றி பிபிசி  செய்திகள்...இலண்டன்

https://www.bbc.com/news/world-asia-56818056 



2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்

முனைவர். வா.நேரு said...

நிச்சயமாக போற்றுதலுக்கு உரியவர்.பல அரசு ஊழியர்கள் இப்படி இருக்கிறார்கள்....நன்றிங்க அய்யா வருகைக்கும் கருத்திற்கும்