Sunday 31 December 2023

ஆட்சியிலிருந்து அகற்றும்...

 

ஒரு வழிப்பறிக் கும்பலிடம்

நாடு சிக்கித் தவிக்கிறது……

வானாளாவிய அதிகாரம்

படைத்தவர்கள் நாங்கள்

என்று ஒன்றிய அரசு

அதிகாரம் செய்கிறது…

 

ஏதுமறியா அப்பாவிகளின்

நிலத்தைப் பிடுங்க

அமலாக்கத்துறை

சம்மன் அனுப்புகிறது..

ஜாதிப்பெயர் போட்டு

முகவரி அனுப்புகிறது...



 

கூட்டாட்சி என்பதை மாற்றி

காட்டாட்சியாய்

காரியங்கள் நிகழ்கிறது..

மக்களின் மூட நம்பிக்கையை

மூலதனமாய் வைத்து

ஆட்டம் போடும் ஒன்றிய அரசின்

இடி அமீன்களை

ஆட்சியிலிருந்து அகற்றும்

இனிய ஆண்டாய் இந்த

ஆண்டு 2024 அமையட்டும்…


இனிய புத்தாண்டு

நல் வாழ்த்துகள்.

                முனைவர்.வா.நேரு,01.01.2024

                 தலைவர் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

 

2 comments:

Anonymous said...

தப்பி தவறி 2024 இல் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தால்...நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

முனைவர். வா.நேரு said...

ஆமாம்....