Saturday, 30 November 2024

கடந்து செல்லுதல்...


Friday, 29 November 2024

அமாவாசை...

 இறந்து போன கணவன்

இன்னமும் தன்மீது

சந்தேகப்பட்டு...

காக்காய் வடிவில் 

கண்காணிப்பதாக எண்ணி...

அடித்து நொறுக்க

கட்டையோடு அலைகிறாள் அவள்...

பாவம் காக்காய் என

எப்படி அவளுக்குப் புரியவைப்பது?.


                                                          வா.நேரு,30.11.2024

                                                         குறுங்கவிதை(20)


Thursday, 28 November 2024

கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்...

 

பெண்கள் உண்மையை

உடைத்துப் பேசுவதும்...

பெருங்குரலில்

பாடுவதும்...

அச்சத்தைத் தருகிறது

ஆதிக்கவாதிகளுக்கு…

‘கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!’

                            வா.நேரு,29.11.2024

                             குறுங்கவிதை(19)

Wednesday, 27 November 2024

இரத்த உறவுகள்…

 

இருக்கும்வரை

தங்களால் ஏற்றமுடியாத

மதக்குறியீட்டை...

இறந்து கிடக்கும்

தோழனின் உடலுக்குள்

ஏற்றத் துடிக்கிறார்கள்

அவரின் இரத்த உறவுகள்…

                       வா.நேரு,28.11.2024

                        குறுங்கவிதை(18)

Tuesday, 26 November 2024

அதுதான் சுயமரியாதை..

 

எவ்வளவு பெரிய

சூப்பர் கம்ப்யூட்டர்

என்றாலும்

காரித்துப்பினால்

எதிர்வினையாற்றுமா?

மனிதன் மீது துப்பினால்

சும்மா விடுவானா?

அதுதான் சுயமரியாதை..

என்றவர் வி.பி.சிங்..

நினைவைப் போற்றுவோம்..

                           வா.நேரு,27.11.2024

                           குறுங்கவிதை(17)

Monday, 25 November 2024

வினையூக்கி நஞ்சு

 

வினையூக்கி நஞ்சு

 

பல வகையில்

நான் உயர அவரும்...

அவர் உயர நானும்

உதவிக் கொண்டிருந்தோம்…

அவரை விட நான்

உயரும் வாய்ப்பு வந்தபோது

பேசுவதை நிறுத்திக் கொண்டார்..


                            வா.நேரு,26.11.2024

                              குறுங்கவிதை(16)

Sunday, 24 November 2024

வினையூக்கி...

 

தினந்தோறும் கவிதை

எழுதுபவர்களை

ஏகத்திற்கும் பகடி செய்து

எழுதியிருந்தார் அக் கவிஞர்..

எப்போதாவது கவிதை எழுதும்

எனக்கு அதைப் படித்தபின்பு

தின்ந்தோறும் எழுதத் தோன்றுகிறது

                                  வா.நேரு,25.11.2024

                                   குறுங்கவிதை(15)

Saturday, 23 November 2024

என்ன செய்வது?

 

கல்விக் கூடமாக

மாறிய

சிறைச்சாலை...

தினத்தந்தி செய்தி..

சிறைச்சாலைகளாக

மாறி நிற்கும்

கல்விக்கூடங்களை

என்ன செய்வது?...

                                               வா.நேரு, 24.11.2024

                                               குறுங்கவிதை(14)

Friday, 22 November 2024

காயங்கள்…

 

நட்பிலும்

கூடக் காயங்கள்…

ஆனால் இவை

பகிரப்படுவதற்காக அல்ல..

பத்திரப்படுத்தி

பெருமூச்சு விட்டுக்கொள்வதற்கு…


                               வா.நேரு,22.11.2024

                                குறுங்கவிதை(13)

Wednesday, 20 November 2024

காத்துக்கிடக்கும் பிணம்போல

 

அதிகாலையில்

மின் சுடுகாட்டில்

எரிக்கப்படுவதற்காகக்

காத்துக்கிடக்கும் பிணம்போலக்

காத்துக்கிடக்கிறார்கள்

மனிதர்கள்

டாஸ்மார்க் கடைகளில்

                                                         வா.நேரு,21.11.2024

                                                      குறுங்கவிதை(12)

Tuesday, 19 November 2024

பிண வாடை இல்லையெனில்...

 

எரியும் பிணத்தின் வாடை

சகிக்க முடியாததாய்

இருந்தது வந்த புதிதில்

என்றான்

சுடுகாட்டுக்கு

அருகில் குடியிருப்பவன்

இப்போது ? என்றேன் நான்..

பிண வாடை இல்லையெனில்

தூக்கம் வர மறுக்கிறது என்றான்..

பழகிப்போகிறது எல்லாமும்…


                                 வா.நேரு, 19.11.2024

                                   துளிப்பா(11)


Monday, 18 November 2024

ஊமைச் சிறுவன்.....

 

பாம்பு கடித்துச் சாவதாய்

கனாக் கண்ட

ஊமைச் சிறுவன்

யாரிடமும் சொல்ல

இயலாமல் இருத்தல்போல

நாடு கிடந்து தவிக்கிறது…

வாய்ப்பூட்டுச் சட்டங்களால்…

வன்முறைக் கும்பல்களால்…


                         வா.நேரு,18.11.2024

                         துளிப்பா(10)

Sunday, 17 November 2024

மாணவர்கள் சிந்திய இரத்தத்தால் எழுந்த தினம் !.

 




நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் நவம்பர் 16-30



ஆகச்சிறந்த விமர்சனம்...

 

பேச்சாளர்

சிரித்துக்கொண்டும் பேசலாம்

சிரிக்கவைத்தும் பேசலாம்..

எப்போதும் கொதிநிலையில்

இருப்பது போலத்தான்

பேச வேண்டுமா அய்யா  ?

சிரித்துக்கொண்டே கேட்ட

அக்கவிஞரின் கேள்வி

ஆகச்சிறந்த விமர்சனம்

 வாழ்வில்

                                          வா.நேரு, 17.11.2024

                                துளிப்பா(9)

Friday, 15 November 2024

கும்பிட மறுப்பார்களா என்ன?

 

'பொன்னியின் செல்வன்

குந்தவைப் பிராட்டியும்

நாளை கடவுளாகலாம்

இராமாயணக் கதை

சீதையைக்

கும்பிடுகிறவர்கள்

நாளை

குந்தவைப் பிராட்டியை

கும்பிட மறுப்பார்களா என்ன?

                              வா.நேரு,15.11.2024

                            துளிப்பா (8)