Thursday 15 April 2021

நம்பிக்கையற்றுப்போவதே .....

 நீண்ட வரிசையில்

காத்திருக்கிறார்கள் மக்கள்

நெடு நேரமாகவும்

காத்திருக்கிறார்கள்....


ஊடகங்கள் காட்டிய

பிம்பம்

சுக்கு நூறாய் உடைகிறது...

வளர்ச்சி வளர்ச்சி என்று

காட்டப்பட்ட இடத்தின் 

சுடுகாட்டில்தான்

மக்கள் நீண்ட வரிசையில்

நெடு நேரமாகக்காத்திருக்கிறாரகள்...


இறந்து போன உறவுகளின்

பிணங்களோடு சுடுகாட்டில்

வரிசை வரிசை வரிசையாக...

எரிக்க இடமில்லை...

மணிக் கணக்காய் 

காத்துக்கிடப்பதாய் 

வ்ரும் செய்திகள் சொல்கின்றன....


ட்ரம்ப வருகை  எனச் சொல்லி

உண்மையை மறைக்க

சுவெரழுப்பி மறைத்தார்கள்....

வரிசையாய் நிற்கும் 

பிணத்தின் நாற்றம்

ஆட்சியின் நாற்றமாய்

உலகெங்கும்  நாறுகிறது..


தன் மாநிலத்து நிலைமை இது..

இதைக் கவனிக்க நேரமில்லை

மேற்கு வங்கத் தேர்தலில்

ஒத்தைக்கு ஒத்தை நிற்கும் 

பெண்ணுக்கு எதிராய்

மல்லுக்கட்டும் மனநிலையில்

நம்மை ஆள்பவர்கள்.....


சதீஸ்கர் மாநிலத்து

அமைச்சருக்கு முன்னால்

உரத்த குரலில் அழுகிறார்

துடிக்கின்றார்.. வார்த்தைகளால்

வெடிக்கின்றார்.. விம்முகின்றார்

மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்

பார்ப்பதற்கு யாருமில்லை...

பிணமாய் என் தந்தையைக் 

கொண்டு செல்கிறேன்..

ஓட்டுக் கேட்க வரும் அமைச்சரே..

இது உங்கள் கண்களுக்குத் 

தெரியலையா என்று துடிக்கும்

அப்பெண்ணின் வேதனைக்கு 

என்ன பதில்? எவர் தருவார் பதில்?.


கும்பமேளா என்னும் பெயரில்

கொத்து கொத்தாய்க்கூட்டம்...

பக்தி என்னும் பெயரில் 

நடக்கும் கூத்தும்...கும்மாளமும்

மாஸ்க்கை எங்கோ மாட்டிக்கொண்டு

வாழும் விலங்குகளாய்

வரிசை வரிசையாய்

எந்த வித இடைவெளியும் இன்றி


உலகம் நம்மைப் 

பார்த்து சிரிக்கிறதே...

முக நூலில் மருத்துவர்

அய்யா சோம இளங்கோவன் பதிவு

அழுவதா! சிரிப்பதா...

இங்கு ஆள்பவர்களின் 

கோமாளித்தனங்களைப் பார்த்து.....


நம்பிக்கையற்றுப்போவதே 

அனைத்திலும் ஆபத்தானது....

ஆள்பவர்களின் மேலான

நம்பிக்கை அற்று விழுகிறது....

அறிவார்களா? அவர்கள்.....


பாகுபாடு காட்டும்

பழமைவாதிகளே 

நம் ஆட்சியாளர்கள்...

மக்களின் மனதில்

ஆழமாக விதை விழுகிறது...

ஒரு நாள் அது 

வெடித்துச்சிதறும்

அப்போது ஆணவமும்

அதிகாரமும் தூள்-தூளாகும்


                            வா.நேரு,16.04.2021


1 comment:

anandam said...

இன்றைய நிலைமைகளுக்குப் பொறுப்பானவர்களை காலம் தண்டிக்கும்...!