ஊடகத்துக்காரன் காட்டும்
கடவுள் வெளிச்சமெல்லாம்
உண்மை வெளிச்சமென…
விட்டில் பூச்சி போய்
டியூப்லைட் வெளிச்சத்தில்
மோதி விழுந்து சாவதுபோல்
கூட்டத்துக்குள் சிக்கி
அய்யகோ எங்கள் உறவுகள்
திக்கித் திணறுகிறார்களே!
மூச்சுத் திண்றிச் சாகின்றார்களே…
சொர்க்கம் கிடைக்குமென
மெக்காவிற்குப் போய்
பேருந்து தீப்பிடித்து
‘அய்யோ கடவுளே !
காப்பாற்று எங்களை
எனக் கதறி அழுதபோதும்’
குழந்தைகளைக் கூடக்
காப்பாற்றவில்லையே கடவுள்…!
எங்கள் உடன்பிறப்புகளின்
இறப்பு..துன்பம்...
எங்களுக்கும் வலிக்கிறது
..
எனினும் இல்லாத கடவுளை
நோக்கி எங்கெங்கோ
பயணம் செய்தாலும்
உதவ மாட்டார் கடவுள்
என்னும் உண்மையைச்
சொல்ல வேண்டியிருக்கிறது…
ஏனெனில் கடவுள் இல்லை..
கடவுள் இல்லை!
கடவுள் இல்லவே இல்லை!
வா.நேரு, 20.11.2025
.jpg)
No comments:
Post a Comment