வேற்று மொழிச்சொற்கள்
என்றாலும் சில சொற்கள்
மனதிற்குள் புகுந்து
வாசம் செய்கின்றன...
அப்படித்தான்
இந்தி மொழிச்சொல்லாம்
'இன்குலாப் ஜிந்தாபாத்'
நீண்ட ஆண்டுகளாய்
மனதிற்குள் ...
நீண்ட வருடங்களுக்குப் பிறகு
இரு சொல் மனதிற்குள்
ஆழமாகப் பதிந்து இரண்டு
பேரைக் கைகாட்டி நிற்கிறது..
அது 'வோட் சோரி...'
இந்த 'வோட் சோரி'களை
விரட்ட மக்கள்
ஒன்று சேர்ந்து போட
வேண்டிய முழக்கம்
'இன்குலாப் ஜிந்தாபாத்'
'அரசியலமைப்புச் சட்டம் ஜிந்தாபாத்'
வா.நேரு, 05.11.2025
No comments:
Post a Comment