கரப்பான் பூச்சி
உடலில் ஊர்வது
போன்ற உணர்வும்
அருவருப்பும்
முகநூலில் இவனது
பதிவுகளைப் படிக்கும்போது
ஏற்படுகிறது எனக்கு…
‘பாலியல் குற்றவாளி’
நாளும் ஒன்றுபேசும்
நாடகக்காரனைப் பின்பற்றி
இவன் போடும் பதிவுகள்
நாற்றம் கொடுக்கிறது எனக்கு…
மெத்தப்படித்தவன்
கைநிறையச் சம்பளம்
வாங்கும் பொறுப்பில்
இருப்பவன்.
எப்படி அவனுக்குக் கீழ்
இவனின் அரசியல் பணி
புரியாத புதிராய் எனக்கு…
திராவிட இயக்கத்துக்
குடும்பத்தில் பிறந்தவன்…
கலைஞர் கொண்டுவந்த
நுழைவுத்தேர்வு நீக்கத்தால்
பலன் பெற்றவன்…
கலைஞர் கொண்டுவந்த
இம்புரூவ்மண்ட் திட்டத்தால்
பொறியாளர் பட்டம் பெற்றவன்..
பட்ட பாடுகளை மறந்தானா?
திராவிடத்தால் வளர்ந்தோம்
எனும் நினைவினை இழந்தானா?
‘வைத்தியம் பார்க்கவேண்டிய
பைத்தியக்காரன்’ பின்னால்…
போனதால் இவனும் சேர்ந்து
பைத்தியம் ஆகிவிட்டானா?
வைத்தியம் பார்த்துத்தான்
இவனை மீட்கவேண்டுமா?
வா.நேரு,
29.01.2026
No comments:
Post a Comment